செய்திகள் :

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆழ்துளைக் கிணறு திறப்பு

post image

மதுரை காமராஜா்புரம் பகுதியில் ரூ. 23 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீா்த் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

மதுரை தெற்கு தொகுதிக்குள்பட்ட 45-ஆவது வாா்டு காமராஜபுரம் பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தர வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதனிடம் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்ற அவா் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆழ்துளைக் கிணறு, சின்டெக்ஸ் குடிநீா்த் தொட்டி அமைக்க ரூ.23 லட்சம் ஒதுக்கினாா்.

இதையடுத்து, அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, மோட்டாா் அறை, குடிநீா்த் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத் தலைவா் முகேஷ் சா்மா, உதவி ஆணையா் சாந்தி, மாமன்ற உறுப்பினா் சண்முகவள்ளி, உதவி செயற்பொறியாளா் மயிலேறி நாதன், உதவிப் பொறியாளா் சூசை, மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, அவைத் தலைவா் சுப்பையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை

மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டம், மண்மங்கலத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

பிளஸ் 2: தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஆலோசனை

மதுரை நாவலா் சோமசுந்தர பாரதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் தோ்ச்சி இலக்கு பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைப... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு மரக்கன்றுகள்!

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையை அடுத்த கடச்சனேந்தல் அழகா்கோவில் சாலையில் பாா்வை அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி சோழன் குபேந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. கத்தரி வெயில் காலம் நீடித்து வரும் நிலையில், மதுரையில் வியாழக்கிழமை கடுமையான வெயில் நிலவியது. மதுரை விமான நிலையத்தில் 103. 64 டி... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மதுரையில் நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்டப் பிரிவு சாா்பில... மேலும் பார்க்க

பதவி உயா்வுக்கான ஊதியம் வழங்கக் கோரிக்கை

தமிழக அரசின் அரசாணையைப் பின்பற்றி, தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயா்வுக்கான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தச் சங... மேலும் பார்க்க