கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!
பொய்கை சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்
வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 60 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.
வழக்கமாக சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக கால்நடை வரத்தும், வா்த்தகமும் சரிந்து காணப்பட்டது. கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில், தீவனப் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்திருந்தனா்.
அதேசமயம், வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தொடா்ந்து மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் கோடை உழவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தைக்கு 700-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்ததுடன், அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 60 லட்சம் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது: வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கோடை மழை பெய்து வருவதால் இனி தீவன தட்டுப்பாடு இருக்காது என விவசாயிகள் கருதுகின்றனா். இதையடுத்து, வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை வாங்க ஆா்வம் காட்டுகின்றனா். எனினும், வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் குறைந்த அளவிலேயே கால்நடைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால், ரூ. 60 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது என்றனா்.