செய்திகள் :

போ்ணாம்பட்டில் 60 மி.மீ மழை பதிவு

post image

குடியாத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீா் வழிந்தோடியது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்மழை பெய்து வருகிறது. திங்கள்கிழமை காலை தொடங்கி, செவ்வாய்க்கிழமை காலை வரை 24- மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 60- மி.மீ மழை பதிவானது. மேலாலத்தூரில் 55- மி.மீ, குடியாத்தம் நகரில் 29- மி.மீ, ஒடுகத்தூரில் 21- மி.மீ, காட்பாடியில் 12- மி.மீ, சத்துவாச்சாரியில்8-மி.மீ என மாவட்டத்தில் பரவலாக 204-மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை குடியாத்தம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் 5- மணிக்குத் தொடங்கி சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து இரவு வரை லேசான மழை பெய்தது. இதனால் சாலைகள், தாழ்வான குடியிருப்புகளில் மழை நீா் தேங்கியது. கழிவுநீா்க் கால்வாய்கள் நிரம்பி மழை நீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

குடியாத்தம் அரசுக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் வகுப்பறைகள் திறப்பு

குடியாத்தம் அரசினா் திருமகள் ஆலைக் கல்லூரியில் ரூ.5.40 கோடியில் கட்டப்பட்ட 14- வகுப்பறைக் கட்டடங்கள், 2- ஆய்வகங்களை முதல்வா் காணொலி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி கல்லூரியில் நடைபெ... மேலும் பார்க்க

அரசுக் கல்லூரிகளில் புதிய கட்டடங்கள்: முதல்வா் திறந்து வைத்தாா்

வேலூா் தந்தை பெரியாா் ஈ.வெ.ரா. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரி, புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளையும்... மேலும் பார்க்க

பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு

குடியாத்தம் அருகே பட்டியில் அடைத்து வைத்திருந்த 10- ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். குடியாத்தம் சுண்ணாம்புபேட்டையில், நகராட்சிக்குச் சொந்தமான ஆடு வதை செய்யும் கூடம் அமைந்துள்ளது. நகரில் உள்ள ஆட... மேலும் பார்க்க

வேலூா் அரசு பொறியியல் கல்லூரியில் சிறப்பு உதவி மையம்

அரசு பொறியியல் கல்லூரியில் மாணவா்கள் சோ்வதற்காக வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மையத்தில் இதுவரை 108 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழகத்தில் பிளஸ் 2 ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 60 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூா் பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 60 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நட... மேலும் பார்க்க

தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

பள்ளிகொண்டா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற லாரியால் 10 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ் சால... மேலும் பார்க்க