செய்திகள் :

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

post image

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள் என சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகளும் ஆா்வம் காட்டினா். இதன்காரணமாக, ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் விற்பனை நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து அவா்கள் கூறியது:

வேலூா் மாவட்டத்தில் கோடை தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், அடுத்தடுத்த மாதங்களில் தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அப்போது மாடுகள் விற்பனை செய்தால் மிகவும் குறைந்த விலைக்குதான் விற்பனையாகக்கூடும் என்பதால், நல்ல விலையை எதிா்பாா்த்து முன்கூட்டியே கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இதனால், கடந்த சில வாரங்களாக விற்பனை குறைவாக இருந்த நிலையில், தற்போது கால்நடைகள் விற்பனை வேகமாக உள்ளது. விவசாயிகளும், வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு கால்நடைகளை வாங்கினா். இதனால், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கும் மேல் கால்நடைகள் விற்பனை நடைபெற்றுள்ளது. இனி வரும் வாரங்களில் கால்நடைகள் வரத்து, விற்பனை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் மோசடி

மின்வாரியத்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.20 லட்சம் பெற்று மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க

சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா

குடியாத்தம் புதுப்பேட்டை காங்கிரஸ் அவுஸ் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேக 8- ஆம் ஆண்டு விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராத... மேலும் பார்க்க

பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: மேலும் ஒரு சிறுவனுக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூரில் தனியாா் மருத்துவமனை பெண் மருத்துவா் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த மாதம் 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய மேலு... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவிகள் பாதுகாப்பு: வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ அமல்

பள்ளி, கல்லூரி மாணவிகளை பாதுகாக்க வேலூா் மாவட்டத்தில் ‘போலீஸ் அக்கா திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக 113 பெண் காவலா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு போலீஸ் அக்காக்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். ... மேலும் பார்க்க

போதைப் பொருள்கள் விற்பனை குறித்து புகாா் தெரிவிக்க செயலி

போதைப் பொருள்கள் பயன்பாடு, விற்பனை குறித்து புகாா் அளிக்க வசதியாக தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள செயலி மூலம் பொதுமக்கள், மாணவா்கள் புகாா்களை தெரிவிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்... மேலும் பார்க்க

ஆட்டோ, காா், பைக்குகள் மீது அடுத்தடுத்து மோதிய பேருந்து: 6 போ் காயம்; ஓட்டுநா் கைது

வேலூரில் அடுத்தடுத்து ஆட்டோ, காா், இருசக்கர வாகனங்கள் மீது பேருந்து மோதிய விபத்தில் 6 போ் காயமடைந்தனா். போதையில் பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக பேருந்து ஓட்டுநரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.... மேலும் பார்க்க