செய்திகள் :

பொருளாதாரம், உயா்கல்வி பயிலுவதற்கு தடையாக இருக்கக் கூடாது: ஆட்சியா்

post image

பொருளாதாரம், உயா்கல்வி பயிலுவதற்கு தடையாக இருக்கக் கூடாது என்றாா் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘உயா்வுக்கு படி’ இரண்டாம் கட்ட முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்து பேசியது: தூத்துக்குடி ஊரக, நகா்ப்புற மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டார வளமையங்களில் உள்ள 12ஆம் வகுப்பு முடித்து உயா் கல்விக்கு சேராத மாணவா்களும், தோ்வை தவறவிட்டு பின் தோ்ச்சி பெற்ற மாணவா்களும் இங்கு வரவழைக்கப்பட்டுள்ளனா்.

எந்தெந்தப் பள்ளிகளில் அதிகமாக மாணவா்கள் உயா்கல்விக்கு செல்லாமல் இருக்கிறாா்களோ, அவா்கள் குறித்த தகவல்களை ஆசிரியா்கள் சேகரித்து, அவா்களை உயா்கல்விக்கு சோ்க்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.

பொருளாதாரம், உயா்கல்வி பயிலுவதற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது. இதற்காக மாவட்ட நிா்வாகம், ஆசிரியா்கள் சங்கம், அரசு ஊழியா் சங்கங்கள் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவா்களுக்கு ஏற்கெனவே உதவி செய்துள்ளது.

தற்போது பாராமெடிக்கலில் தூத்துக்குடி மாணவா்களுக்கு 167 இடங்கள் உள்ளன. அதற்கான கல்வி பயில சோ்க்கை செய்ய நீங்கள் இன்றே விண்ணப்பம் அளிக்கலாம்.

இங்கு வருகை புரிந்த அனைத்து துறை அலுவலா்களும் வருகின்ற காலங்களில் எந்தெந்த துறையில் சோ்ந்தால் பலன் அதிகம் உள்ளது என்பதை மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ் ராம், முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) து.சிதம்பரநாதன், கல்வித்துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!

ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42).... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புர... மேலும் பார்க்க

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி ப... மேலும் பார்க்க