செய்திகள் :

போட்டியின் நடுவே வெளியேறிய ரிஷப் பந்த்; இந்திய அணிக்கு சிக்கலா?

post image

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆடுகளத்தை விட்டு போட்டியின் நடுவே வெளியேறினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் இன்று (ஜூலை 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 200 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

ரிஷப் பந்த்துக்கு காயம்

மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாவது செஷனில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், பந்தினை தடுக்க முயன்று அவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

முதல் இன்னிங்ஸின் 34-வது ஓவரை இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசினார். விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், அவருக்கு இடதுபுறம் சென்ற பந்தினை தடுக்க டைவ் அடித்தார். இருப்பினும், அவரால் பந்தினை முழுமையாக தடுக்க முடியவில்லை. இந்த முயற்சியில் அவருக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.

பந்தினை தடுக்க முயன்று கையில் அடிபட்ட ரிஷப் பந்த்துக்கு, உடனடியாக ஆடுகளத்தில் வலி நிவாரணிகளைப் பயன்படுத்தி மருத்துவ உதவி செய்யப்பட்டது. இருப்பினும், அவரால் தொடர்ந்து கீப்பிங் செய்ய முடியவில்லை. இதனையடுத்து, பும்ராவின் ஓவர் முடிவடைந்தவுடன், ரிஷப் பந்த் ஆடுகளத்திலிருந்து வெளியேறினார்.

விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் போட்டியின் நடுவே காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவருக்குப் பதிலாக துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

காயம் காரணமாக போட்டியின் நடுவே வெளியேறிய ரிஷப் பந்த், பேட்டிங் செய்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருடைய காயத்தின் தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்திய அணியின் மருத்துவக் குழு சோதித்து வருகிறது. காயம் காரணமாக அவர் பேட்டிங் செய்ய முடியாத சூழல் உருவாகும் பட்சத்தில், அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனக் கூறப்படுகிறது.

Wicketkeeper Rishabh Pant left the field due to injury on the first day of the third Test against England.

இதையும் படிக்க: 5 பந்துகளில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர்; அயர்லாந்து வீரரின் அசத்தலான சாதனை!

லார்ட்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பும்ரா; இங்கிலாந்து 387 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று ... மேலும் பார்க்க

இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை; பிசிசிஐ கூறுவதென்ன?

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாளிலும் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்யாதது, பேட்டிங்கில் அவர் களமிறக்கப்படுவாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து... மேலும் பார்க்க

எனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ்: நிதீஷ் ரெட்டி

இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி தனது சிறப்பான பந்துவீச்சுக்குக் காரணம் பாட் கம்மின்ஸ் எனக் கூறியுள்ளார். இந்தியாவின் ஆல் ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டி இந்தியாவுக்கு கடந்த பிஜிடி தொடரில் டெஸ்ட்டில் அறிமுகமா... மேலும் பார்க்க

ஜஸ்பிரித் பும்ரா அசத்தல்; குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் குறுகிய இடைவெளியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அசத்தினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்க... மேலும் பார்க்க

37-வது சதம் விளாசிய ஜோ ரூட்; ராகுல் டிராவிட், ஸ்டீவ் ஸ்மித் சாதனை முறியடிப்பு!

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவரது 37-வது சதத்தைப் பதிவு செய்தார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் திடலில் நேற்று (ஜூலை 10) தொடங்கியது. ... மேலும் பார்க்க

அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடம் கற்றுக் கொண்டேன்: தீப்தி சர்மா

அழுத்தத்தைக் கையாள்வதை தோனியிடமிருந்து கற்றுக் கொண்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.... மேலும் பார்க்க