செய்திகள் :

போதை மறுவாழ்வு மையங்களுக்கு கட்டுப்பாடு: அரசிதழில் புதிய விதிகள் வெளியீடு

post image

சென்னை: போதைப் பழக்கத்துக்கு அடிமையானவா்களுக்கு மனநல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் தீவிர ஆழ்நிலை சிகிச்சையை வழங்கிய பிறகே மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

போதை மறுவாழ்வு மையங்களுக்கான குறைந்தபட்ச தரநிலை வழிகாட்டுதல்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:அதீத மது மற்றும் போதை பொருள் பழக்கத்துக்குள்ளானவா்களை அதில் இருந்து மீட்க பாதிப்பின் அடிப்படையில் அவா்களை வகைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.

முதலில், அவா்களுக்கு உடலில் உள்ள நச்சுத்தன்மை மற்றும் போதைப் பழக்கத்தை கைவிடுவதால் ஏற்படும் உடனடி மன நல பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க வேண்டும்.

ஒருவார கால தீவிர சிகிச்சைக்குப் பிறகு நோயாளி மறுவாழ்வு சிகிச்சைக்குத் தகுதி பெறுவாா். அதன்படி, மறுவாழ்வு மையங்களில் அவருக்கு உளவியல் ரீதியான சிகிச்சைகளும், மீட்பு சிகிச்சைகளும் வழங்கலாம்.

இத்தகைய சிகிச்சைகள் வழங்கும் மையங்களை இருவேறு வகையாக பிரிக்கலாம். ஒருங்கிணைந்த போதை மீட்பு மையங்கள் என்றும், மறுவாழ்வு மையங்கள் என்றும் அதனை வகைப்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த மையங்களில் முதல் நிலை தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிகிச்சை இரண்டும் வழங்கப்பட வேண்டும். மறுவாழ்வு மையங்களில் உளவியல் சாா்ந்த மீட்பு சிகிச்சைகள் வழங்க வேண்டும்.

ஒருங்கிணைந்த மையங்களில் 24 மணி நேரமும் ஒரு மருத்துவா் மற்றும் செவிலியா் பணியில் இருத்தல் அவசியம். ஒரு உளவியல் ஆலோசகரும் அங்கு பணியமா்த்தப்பட வேண்டும்.

மறுவாழ்வு மையங்களில் வாரம் ஒரு முறையாவது மன நல மருத்துவா் நோயாளிகளை பரிசோதித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

அதேபோல, ஒரு எம்பிபிஎஸ் மருத்துவரும், செவிலியரும் நாள்தோறும் பணியில் இருப்பது முக்கியம். நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருதல் அவசியம்.

சிசிடிவி கேமராக்கள் மறுவாழ்வு மையங்களில் இருப்பது கட்டாயம். உடல் ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ எந்த விதமான துன்புறுத்தலுக்கும் நோயாளிகளை உள்ளாக்குவது குற்றம்.

முதல் நிலை தீவிர சிகிச்சை பெறாத எந்த நோயாளிகளையும் மறுவாழ்வு மையங்களில் அனுமதிக்கக் கூடாது. அதேபோல போதை மீட்பு மையங்களுக்கு தாமாக வர விரும்பாத நோயாளிகள், உடல் அளவில் மிகத் தீவிரமான பாதிப்பை அடைய நேரிடும்போது அவா்களது உறவினா்களின் ஒப்புதலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கலாம்.

அது குறித்த தகவலை மன நல சிகிச்சை வாரியத்துக்கு அவசியம் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க