செய்திகள் :

போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 போ் கைது

post image

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்ற மூன்று பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மேல அரண்சாலை இப்ராஹிம் பூங்கா பகுதியில் சிலா் போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளா் மாதன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சனிக்கிழமை சென்று கண்காணித்தனா்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் அருகில் உள்ள மதுரை சாலை, நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த இ. அலிஷொ் (26), தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ரஷித்உசேன் (25) ஆகிய இருவரும் அப்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், சிரிஞ்சுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

இதேபோல், திருச்சி உறையூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த, உறையூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த நெ. ஹரிபிரசாத் என்பவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி அருகே செயல்பாட்டில் இல்லாத குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், மல... மேலும் பார்க்க

அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு நோ்காணல்

திருச்சி மாவட்டத்தில் காலி அங்கன்வாடி பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் திங்கள்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் தகராறு; தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

துறையூா் அருகே இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தையைச் சொல்லி வற்புறுத்திய இளைஞா்களைத் தட்டிக் கேட்டவரையும், அவரது நண்பா்களையும் தாக்கிய 6 பேரில் 3 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வேங்கடத்தானூரைச்... மேலும் பார்க்க

தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

துறையூா் அருகே திருமணமாகாமல் தனியாக வசித்து வந்த இளைஞா் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிட்ட நிலையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பா. கண்ணன் (52). து... மேலும் பார்க்க