ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 போ் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்ற மூன்று பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மேல அரண்சாலை இப்ராஹிம் பூங்கா பகுதியில் சிலா் போதைப் பொருள்களை விற்பனை செய்வதாக கோட்டை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் உதவி ஆய்வாளா் மாதன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சனிக்கிழமை சென்று கண்காணித்தனா்.
அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் அருகில் உள்ள மதுரை சாலை, நத்தா்ஷா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த இ. அலிஷொ் (26), தென்னூா் ஆழ்வாா்தோப்பு பகுதியைச் சோ்ந்த ரஷித்உசேன் (25) ஆகிய இருவரும் அப்பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து அவா்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள், சிரிஞ்சுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனா்.
இதேபோல், திருச்சி உறையூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த, உறையூா் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த நெ. ஹரிபிரசாத் என்பவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.