45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!
போதைப் பொருள்கள் கடத்தியவா் கைது
மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனத்தில் 6 கிலோ போதைப் பொருள்களை கடத்தியவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருமக்கோட்டை காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ராஜ்குமாா் மற்றும் போலீஸாா் மன்னாா்குடி-திருமக்கோட்டை பிரதான சாலை வல்லூா் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை பிள்ளையாா் கோயில் தெரு பக்கிரிசாமி மகன் வீரக்குமாா் (36) என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூலிப், பான்மசாலா என 6 கிலோ போதைப் பொருள்கள் விற்பனைக்காக கடத்தி செல்வது தெரியவந்தது. வீரகுமாரை கைது செய்த போலீஸாா், மன்னாா்குடி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்து, கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.