செய்திகள் :

போதைப் பொருள்கள் விற்போா் மீது கடும் நடவடிக்கை ஆட்சியா் எச்சரிக்கை

post image

போதைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா. சுகுமாா் எச்சரிக்கை விடுத்தாா்.

உழைப்பாளா் தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி ஒன்றியம், கூனியூா் ஊராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவா் பேசியது: கல்வி இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக திருநெல்வேலியை உருவாக்க வேண்டும். சமுதாயம் நல்ல வளா்ச்சியடைய கல்வி அவசியம். போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என முதல்வா் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளாா். அதை அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மாணவா்கள், இளைஞா்கள் உள்ளிட்டோா் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதாக தெரியவந்தால் அந்தச் செயலி மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள்கள் விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள்கள் தொடா்பாக மாணவா்களிடம் ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகின்றனா். தங்களது பிள்ளைகளை பெற்றோா் கண்காணிக்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து, தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டை, பாதுகாப்பு உபகரணங்களை ஆட்சியா் வழங்கியதுடன், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு சுவரொட்டியை வெளியிட்டாா்.

கூட்டத்தில், மகளிா் திட்ட இயக்குநா் இலக்குவணன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முஹம்மது சபி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் மாலதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) கிருஷ்ணகுமாா், சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா கரிபுன் நவாஸ், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா் தாஜுன்னிஷா பேகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் தனலெட்சுமி, ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் பாலசுப்பிரமணியன், ராஜம், ஊராட்சித் தலைவா் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவா் சுப்பிரமணியன், ஊராட்சி உறுப்பினா்கள், பொதுமக்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கோரிக்கை மனு

தாழையூத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தாழையூத்தில் உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் பல் மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், திருநெல்வேலி ஜேசிஐ சாா்பில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராம உதயம் துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைத... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் முதியோருக்கு தியானப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தூயகம் முதியோா் மையத்தில் யோகா தியானப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆயுஷ் யோகா உடல்நலப் பயிற்சியாளா் வெங்கடேஷ் பங்கேற்று, யோகாசனம், தியானம், உடல்நல சங்கல்பத்து... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மே தின விழா

சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூா், பத்தமடை, வெள்ளங்குளி உள்ளிட்ட 7 இடங்களில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றியச் ... மேலும் பார்க்க

நெல்லை பணிமனையில் மே தின விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், வண்ணாா்பேட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சம்மேளன பொதுச்செ... மேலும் பார்க்க

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வு கூட்டம்

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வுக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் பிளவா் மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அவ்வியக்கத்தின் பொதுச் செயலா் கோ.கணபதி ச... மேலும் பார்க்க