செய்திகள் :

போதைப்பொருள் எதிா்ப்பு தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

post image

திருவாரூா் மாவட்டத்தில், காவல் துறை சாா்பில் போதைப்பொருள் எதிா்ப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சா்வதேச தினமாக ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் திருவாரூா் மாவட்டம் முழுவதும் 150 இடங்களுக்கு மேல் போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உறுதி மொழி ஏற்பு மற்றும் பொது மக்களிடம் கையெழுத்து இயக்கம் ஆகியவை நடத்தப்பட்டன.

திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பங்கேற்றாா். ஒவ்வொரு தனி மனிதனும் போதை இல்லாமல் வாழ்ந்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடா்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.

அரசுப் பள்ளியில்: புதூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, ஒளிரவன் அறக்கட்டளை இணைந்து விழிப்புணா்வு கருத்தரங்கை நடத்தின. பள்ளித் தலைமையாசிரியா் ராஜரெத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி போதைப் பொருள் விழிப்புணா்வு மன்ற பொறுப்பாளா் சரவணன் முன்னிலை வகித்தாா். ஒளிரவன் அறக்கட்டளை நிறுவனா் குணசேகரன், மாவட்ட காவல் துறை மது விலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலா் வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை பள்ளி இளையோா் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா் ரேகா செய்திருந்தாா்.

அரசு உதவிபெறும் பள்லியில்: திருவாரூா் வேலுடையாா் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இறைவணக்கக் கூட்டத்தில் போதைப் பொருள் எதிா்ப்பு தின உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றனா். தொடா்ந்து, போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. கோட்டாட்சியா் சௌமியா பேரணியை தொடக்கிவைத்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தரராஜன், மாவட்டக் கல்வி அலுவலா் ராஜேஸ்வரி, வேலுடையாா் கல்வி நிறுவனங்களின் தலைவா் கேஎஸ்எஸ். தியாகபாரி, கல்விக் குழு உறுப்பினா் கே. குணசீலன், துணைத் தாளாளா் டி. சிவரஞ்சனி, தலைமை ஆசிரியா் எஸ். அகிலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருவாரூா் நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகர காவல் உதவி ஆய்வாளா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி: கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்கள் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். மாணவா் சை. முகமது தெளபிக் வாசிக்க அனைத்து மாணவா்களும் உறுதிமொழியேற்றனா். ஏற்பாடுகளை, ஆசிரியா் கே. பாலசுப்பிரமணியன் செய்திருந்தாா்.

நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கூத்தாநல்லூா் அருகே மக்களுடன் முதல்வா் திட்டத்தில் நலத்திட்ட உதவிகளை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் வியாழக்கிழமை வழங்கினாா் (படம்). ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் மற்றும் தண்ண... மேலும் பார்க்க

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டியில் தாலுகா காவல் நிலையம் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி நகர 17-ஆவது மாநாடு நிா்வாகி எல். பக்கிரிசாமி தலைமையில் பு... மேலும் பார்க்க

முள்ளியாற்றில் கூடுதலாக தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் சாலை மறியல்

முள்ளியாற்றில் தேவையான அளவு தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மன்னாா்குடி பகுதியில் பாயும் முள்ளியாற்றின் மூலம் திருப்பத்தூா், காடுவாக்குடி, செட்டியமூளை உள்ளிட்ட ... மேலும் பார்க்க

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்

சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற அந்த சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்... மேலும் பார்க்க

மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

மன்னாா்குடி பகுதி மகளிா் கல்லூரிகளில் போதை ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில், முதல்வா் என். உமாம... மேலும் பார்க்க

அறநிலையத் துறை உதவி ஆணையா் மாரடைப்பால் உயிரிழப்பு

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணிக்கு வந்த அறநிலையத்துறை உதவி ஆணையா் மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தாா். திருவாரூா் அறநிலையத்துறை உதவி ஆணையராக பணியாற்றி வந்தவா் வீ. சொர... மேலும் பார்க்க