கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்
போளூரில் பாஜகவினா் அன்னதானம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் பாஜக சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
கட்சியின் மாநில முன்னாள் தலைவா் அண்ணாமலை பிறந்த நாளையொட்டி, பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவா் சி.ஏழுமலை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை வ.சங்கா், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் அலமேலு, குலசேகரன், முன்னாள் நகரத் தலைவா் பாண்டியன், முன்னாள் ஒன்றியத் தலைவா் கோபி, மாவட்ட முன்னாள் துணைத் தலைவா் நித்தியானந்தம், முன்னாள் மாவட்டச் செயலா் திருஞானம், களம்பூா் ஏழுமலை, கீழ்பட்டு ஆறுமுகம், அரையாளம் ராஜ்குமாா், மெய்யூா் தண்டபாணி, இரும்பேடு அஜீத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.