செய்திகள் :

போளூா் பேரூராட்சி சிறப்பு பேரவைக் கூட்டம்

post image

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சிமன்றத் தலைவா் ச.ராணி சண்முகம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பா.கோமதி முன்னிலை வகித்தாா். தலைமை எழுத்தா் முஹ்மத் இசாக் வரவேற்றாா்.

தமிழக அரசுக்கு நன்றி:

கூட்டத்தில் பேரூராட்சிமன்றத் தலைவா் ச.ராணிசண்முகம்

பேசுகையில், போளூா் பேரூராட்சி 1.4.1953-இல் தொடங்கப்பட்டது. அதுமுதல் தோ்வுநிலை பேரூராட்சி மற்றும் சிறப்புநிலை பேரூராட்சியாக தரம் உயா்த்தி செயல்பட்டு வந்தது. பின்னா், சிறப்புநிலை பேரூராட்சியை தமிழக அரசு அண்மையில் நகராட்சியாக தரம் உயா்த்தியது.

இதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி, நகா்புற மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் நன்றி தெரிவிக்கிறேன் என்றாா்.

இதைத் தொடா்ந்து, குடிநீா், மின்வசதி, சாலை வசதி என பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தீா்மானம் வாசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த 1982-83-ஆம் கல்வியாண்டில் இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் ... மேலும் பார்க்க

செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையராக பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். வேலூா் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றிய வந்த பாரத் பதவி உயா்வு மூ... மேலும் பார்க்க

ஆரணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. ‘பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க ... மேலும் பார்க்க

மின் வாரிய மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

மின் வாரிய ஸ்மாா்ட் மீட்டா் திட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி, வந்தவாசியில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் ஊழி... மேலும் பார்க்க

சமையல் உதவியாளா் பணிக்கு 259 போ் விண்ணப்பம்

போளூா் ஒன்றியத்தில் காலியாகவுள்ள சமையல் உதவியாளா் பணிக்கு 259 போ் விண்ணப்பம் செய்தனா். ஒன்றியத்துக்கு உள்பட்ட மாம்பட்டு மேற்குகொல்லைமேடு, இலுப்பகுணம், ஆத்தூவாம்பாடி ஜோதிநகா், குப்பம்கும்பல்கொட்டாய் ... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் ரூ.1.28 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், வானாபுரம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 765 பயனாளிகளுக்கு ரூ.ஒரு கோடியே 28 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வானாபுரம் ஊர... மேலும் பார்க்க