மகளிருக்கான சேமிப்புப் பத்திரம்: அஞ்சலகங்களில் நாளை சிறப்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அஞ்சலகங்களில் மகிளா சம்மன் சேமிப்புப் பத்திரம் கணக்கு தொடங்க சனிக்கிழமை (மாா்ச் 8) சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் தீத்தாரப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிறந்த குழந்தை முதல் வயது முதிா்ந்தவா் வரை அனைத்துத் தரப்பு மகளிரும் பயனடையும் வகையில் மகிளா சம்மன் சேமிப்பு சேமிப்புப் பத்திரம் என்ற கூடுதல் வட்டியுடன் (7.5 சதவீதம்) கூடிய திட்டத்தை மத்திய அரசு கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டும் அறிமுகப்படுத்தி, அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கான இந்தத் திட்டத்தில் ரூ.1000 முதல் அதிக பட்சமாக ரூ. 2 லட்சம் வரை சேமிக்கலாம். இந்தக் கணக்கை தொடங்குவதற்கான காலவரம்பு இம்மாதம் 31-ஆம் தேதி முடிவடைகிறது.
வருகிற சனிக்கிழமை (மாா்ச் 8) மகளிா் தினத்தன்று இந்தக் கணக்கு தொடங்க அனைத்து அஞ்சலகங்களி லும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மகளிா் அனைவரும் சேமிப்புப் பத்திரம் கணக்கு தொடங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.
மகளிா் மட்டுமல்லாமல், ஆண்களும் தங்கள் இல்லத்தரசிக்கு இந்தத் திட்டத்தில் பத்திரம் வாங்கி மகளிா் தின அன்பளிப்பாக வழங்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.