செய்திகள் :

மகளிரை 'ஓசி' என திமுக எம்எல்ஏ விமர்சனம்: நயினார் கண்டனம்

post image

சென்னை: மகளிரை 'ஓசி' என அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், மண்ணூத்து பகுதியில் புதியதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பேசிய ஆண்டிப்பட்டி திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், மக்களின் மனம் அறிந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்றுதான் மகளிர் விடியல் பயணத் திட்டம். நான் முன்பு கூறியதுபோல, மகளிர் அனைவரும் அரசு பேருந்தில் 'ஓசி'-இல் தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகலுக்கு பயணியுங்கள். வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும் என்று பேசினார்.

சமுதாய நலக்கூடம் திறப்பு விழாவில் பொதுமக்கள் மத்தியில் கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை 'ஓசி' என விமர்சித்த மகாராஜன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திமுக சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெள்ளிட்டுள்ள கண்டன அறிக்கையில்,

கட்டணமின்றி பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிரை 'ஓசி' என்று திமுக பேரவை உறுப்பினர் விமர்ச்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் பொன்முடியும் இதே போன்று பேருந்துகளில் கட்டணமின்றி பயணிப்போரை 'ஓசி' என்று தரம் தாழ்ந்து விமர்சித்ததும், திமுக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் ரூ.1000 வாங்கியதால் தானே பளபளனு இருக்கீங்க என்று பெண்களைக் கொச்சையாக விமர்சித்தார்.

மக்கள் நலனை மேம்படுத்தும் போர்வையில் திட்டங்களை அமல்படுத்தி அதன் விளம்பரங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் பொடுப்பதும், பின் பயனாளிகளை 'ஓசி' என்று கீழ்த்தரமாக விமர்சிப்பதும் தான் திராவிட மாடல் போலும்!

ஒவ்வொரு முறையும் மகளிர் பயனாளிகளை விமர்சிப்பதில் காட்டும் முனைப்பை ஓட்டை உடைசலாக இருக்கும் பேருந்துகளை சரிப்படுவதிலோ அல்லது அனைத்து மகளிருக்கும் ரூ.1000 கிடைப்பதை உறுதி செய்வதிலோ திமுக தலைவர்கள் காட்டாதது ஏன்?

அதிகார மமதையில் எளிய மக்களை எள்ளி நகையாடி ஏளனப்படுத்துவது ஏற்புடையதல்ல! மகளிரை அவமதிக்கும் திமுக அரசு இனியாவது திருந்தட்டும்! என கூறியுள்ளார்.

விளிம்புநிலை மாணவா்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதில் தாமதம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

விஜய் ரூபானிக்கு அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறிய சோகம்!

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் பலியானவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும்(68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்... மேலும் பார்க்க

விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்பு!

அகமதாபாத்: இரண்டு என்ஜின்களும் செயலிழந்தது அல்லது புறப்பட்ட சிறிது நேரத்தில் பறவை மோதியது, ஏா் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு காரணமாக இருக்கலாம் என்று விமானத் துறை நிபுணா்கள் தெரிவித்த நிலையில்... மேலும் பார்க்க

நத்தம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்து: நல்வாய்ப்பாக உயிர் தப்பிய ஓட்டுநர்!

நத்தம் அருகே சாலை தடுப்பில் ஓடுகள் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில், ஆனால் ஓட்டுநர் நல்வாய்ப்பாக காயங்கள் ஏதுவுமின்றி உயிர் தப்பினார். அடிக்கடி சாலை தடுப்புகளால் தொடரும் விபத்துகளால் மக்கள் அ... மேலும் பார்க்க

ரூ.73 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.8 உயா்ந்து ரூ.72,808-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடித்து வந்த நிலையில், கடந... மேலும் பார்க்க

தனியாா் முதியோா் காப்பகத்தில் உணவருந்திய மேலும் ஒருவர் உயிரிழப்பு

சுரண்டை: தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் உள்ள தனியாா் முதியோா் காப்பகத்தில் மாமிச உணவருந்திய 3 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தை அடுத்து உயிரிழப்பு 4 ஆக உயர... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்!

மேட்டூா்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,339 கன அடியிலிருந்து 6,896 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட... மேலும் பார்க்க