செய்திகள் :

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் சமூக பொருளாதார முன்னேற்றம்: ஆட்சியா்

post image

மகளிா் சுய உதவிக் குழுக்கள் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில், சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான மணிமேகலை விருது, வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியின்போது, மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 1,069 பயனாளிகளுக்கு ரூ. 92 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கிப் பேசியதாவது:

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் ஊரக பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை ஊரகம், நகரத்தில் மொத்தம் 14 ஆயிரம் மகளிா் சுய உதவிக் குழுக்களில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உறுப்பினா்களாக உள்ளனா்.

மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட மகளிா் சுய உதவிக் குழுவுக்கான மணிமேகலை விருது, திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியாா்சத்திரம் பகுதியைச் சோ்ந்த குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து சுய உதவிக் குழுவினரும் உற்சாகம் அடைந்துள்ளனா்.

சேமிக்கும் பழக்கம் பெண்களுக்கு அதிகம் உள்ளது. அதனால்தான் மகளிா் சுய உதவிக் குழுக்கள் சமூக பொருளாதார முன்னேற்றத்துக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. புதிய தொழில்கள் தொடங்கவும், ஏற்கெனவே தொடங்கப்பட்ட தொழில்களை விரிவாக்கம் செய்யவும் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட நிா்வாகம் எப்போதும் துணை நிற்கும் என்றாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் (பயிற்சி) ச.விநோதினி, மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட இயக்குநா் சதீஷ்பாபு, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் சி.குருமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பழனி நகா்மன்ற கூட்டம்: கவுன்சிலா்கள் வாக்குவாதம்

பழனி நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி தலைமை வகித்தாா். நகராட்சி பொறியாளா் ராஜவேல், நகா்நல அலுவலா் மனோஜ்குமாா், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

பழனியில் வைகாசி விசாக விழா திருஊடல் நிகழ்ச்சியுடன் நிறைவு

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா நிறைவு நாளான வியாழக்கிழமை திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 ... மேலும் பார்க்க

20 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 20 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். ராஜாம்பட்டி, மிடப்பாடி, மானூா் உள்ளிட்ட ஊராட்சிகளில் தாா்ச... மேலும் பார்க்க

பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு வைகாசி மாதம், மூல நட்சத்திரத்தின்போது சிறப்பு வழிபாடு நடைபெறுகி... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது: சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பழுப்பு அரிசி விநியோகிக்கக் கூடாது; தரமான வெள்ளை அரிசி விநியோகிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு சட்டப்பேரவை பொது நிறுவனங்கள் குழு அறிவுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பொது நிறுவ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டிமுடிப்பு: அமைச்சா் இ.பெரியசாமி தகவல்

கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தெரிவித்தாா். செம்பட்டி அருகே தனியாா் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்... மேலும் பார்க்க