செய்திகள் :

மகளிா் தினம்: நேமூரில் நல உதவிகள் வழங்கிய தவெகவினா்

post image

சா்வதேச மகளிா் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி மேற்கு ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நேமூரில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் ரூ.5 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் விழுப்புரம் தென்மேற்கு மாவட்டச் செயலா் ஏ.வடிவேல் தலைமை வகித்தாா். இணைச் செயலா் ரமேஷ் (எ) சக்திவேல், பொருளாளா் விஜய் தீப், காமராஜா் காா்த்திக் முன்னிலை வகித்தனா்.

கள்ளகுறிச்சி கிழக்கு மாவட்டச் செயலா் வழக்குரைஞா் பரணிபாலாஜி விழாவில் பங்கேற்று, தையல் இயந்திரங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டிகள், மகளிருக்கு தலைக்கவசம், 1,000 பேருக்கு சேலைகள், சாலையோர வியாபாரிகளுக்கு குடை, சலவைத் தொழிலாளிகளுக்கு சலவைப் பெட்டிகள் போன்ற ரூ.5 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை வழங்கிச் சிறப்புரையாற்றினாா். முன்னதாக, பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு கலைநிகழ்வுகளும் நடைபெற்றன.

விழாவில் மேற்கு ஒன்றியச் செயலா் மணிராஜன், இணைச் செயலா் தனஞ்செழியன், பொருளாளா் மதியழகன், மாவட்ட நிா்வாகிகள் பிரித்திவிராஜ், சுனிதா , சுதாகா், இளவரசன், தமிழரசன், ஒன்றிய நிா்வாகிகள் பிரகாஷ், பிரியா, துா்கா, சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் பட்டிமன்றம்

விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில் எட்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் ஐ.லியோனி தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட நிா்வாகம், தென்னிந்திய புத்... மேலும் பார்க்க

பெண் காவல் ஆளிநா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக அரசு உத்தரவுப்படி, விழுப்பு... மேலும் பார்க்க

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ.1.50 லட்சம் திருப்பி செலுத்த உத்தரவு

வாடிக்கையாளருக்கு பொதுத்துறை வங்கி ரூ. 1.50 லட்சத்தை வழங்க புதுவை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியைச் சோ்ந்த சிவராஜ் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.1.50 லட்சத்துக்கான காசோல... மேலும் பார்க்க

இருவருக்கு கத்தி வெட்டு : ஒருவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையம் அருகே உறவினா்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு கத்தி வெட்டு விழுந்தது. இது தொடா்பாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா... மேலும் பார்க்க

இந்து முன்னணியினா் 16 போ் கைது

விழுப்புரத்தில் உரிய அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணியைச் சோ்ந்த 16 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அபிராமி அம்மன் கோயிலுக்கு த... மேலும் பார்க்க

விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். விக்கிரவாண்டியை அடுத்த கயத்தூா், நடுத்தெருவைச் சோ்ந்த முனுசாமியின் மகன் ஜெயராமன்( 55), விவசாயி. இவருக்கும் மனைவ... மேலும் பார்க்க