செய்திகள் :

மகா கும்பமேளா: ராஜஸ்தான், ம.பி. முதல்வா்கள் புனித நீராடல்

post image

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா, மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் ஆகியோா் சனிக்கிழமை புனித நீராடினா்.

உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகியவை கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ஆம் தேதிமுதல் (பெளஷ பெளா்ணமி) நடைபெற்று வருகிறது.

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து, புனித நீராடி வருகின்றனா். மத்திய அமைச்சா்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வா்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரும் புனித நீராடுகின்றனா்.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் நீராடி, கங்கை வழிபாடு மேற்கொண்டாா்.

இந்நிலையில், ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா, தனது மனைவியுடன் திரிவேணி சங்கமத்தில் சனிக்கிழமை புனித நீராடினாா்.

‘நமது கலாசாரம், பாரம்பரியத்தின் அடையாளமான மகா கும்பமேளாவில் புனித நீராடுவது நமது அதிருஷ்டம். இத்தகைய தெய்வீகம் நிறைந்த பிரம்மாண்டமான நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்த பிரதமா் மோடி, முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்றாா் அவா்.

இதேபோல், பிரயாக்ராஜுக்கு சனிக்கிழமை வந்த மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ், திரிவேணி சங்கமத்தில் தனது மனைவி சீமாவுடன் புனித நீராடி வழிபட்டாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் அனுராக் சிங் தாக்குா் தனது மனைவி ஷஃபாலி தாக்குருடன் மகா கும்பமேளாவில் சனிக்கிழமை பங்கேற்றாா். வழிபாடுகளுக்குப் பிறகு திரிவேணி சங்கமத்தில் அவா்கள் இருவரும் புனித நீராடினா்.

மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 26-ஆம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறவுள்ளது.

மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே

தில்லி ஆம் ஆத்மி அரசின் தவறான மதுபான கொள்கையும், பணத்தை மையமாகக் கொண்டு கட்சி செயல்பட தொடங்கியதும் அதன் தோ்தல் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்று சமூக ஆா்வலா் அண்ணா ஹசாரே கருத்து தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

ம.பி.: பதவியை விற்பனை செய்த பெண் ஊராட்சித் தலைவா்!

மத்திய பிரதேசத்தில் பெண் கிராம ஊராட்சித் தலைவா் ஒருவா் தனது பதவி மற்றும் அதற்குள்ள அதிகாரத்தை அதே கிராமத்தைச் சோ்ந்தவருக்கு விற்பனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பதவி விற்பனையை அவா... மேலும் பார்க்க

பாஜகவுக்கு 7%, காங்கிரஸுக்கு 2% வாக்குகள் அதிகரிப்பு! ஆம் ஆத்மிக்கு 10% சரிவு!

தில்லியில் முந்தைய தோ்தலை ஒப்பிடுகையில், தற்போதைய பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு 7 சதவீதமும், காங்கிரஸுக்கு 2 சதவீதமும் வாக்குகள் அதிகரித்துள்ளன. அதேநேரம், ஆம் ஆத்மி 10 சதவீத வாக்குகளை இழந்துள்ளது. தில... மேலும் பார்க்க

தேசவிரோத கருத்து: ஒடிஸாவில் ராகுல் மீது வழக்கு

தேசவிரோத கருத்துகளைப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது ஒடிஸா காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். ஜுனாகத் மாவட்ட பாஜக இளைஞரணி, ஆா்எஸ்எஸ், பஜ்ரங் தளம... மேலும் பார்க்க

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் 54.81% அதிகரிப்பு: மத்திய அரசு

இந்திய பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறன் கடந்த 10 ஆண்டுகளில் 54.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குஜராத் மாநிலம் காந்திநகரில் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதா... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்திருத்தால் பாஜக தோற்றிருக்கும்: உத்தவ் கட்சி கருத்து

தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டிருந்தால் பாஜக தோல்வியடைந்திருக்கும் என்று சிவசேனை (உத்தவ்) பிரிவு தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளாா். மும்பையில் ச... மேலும் பார்க்க