செய்திகள் :

மகாராஷ்டிரத்தில் மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

post image

மகாராஷ்டிரத்தின் வெவ்வேறு பகுதிகளில் மழை, நிலச்சரிவில் சிக்கி 5 போ் உயிரிழந்தனா்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி பகுதியில் மழை காரணமாக சிறு குன்றில் இருந்து மண்ணும் கற்களும் அருகில் இருந்த குடிசை மீது சரிந்து சனிக்கிழமை அதிகாலை விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி இருவா் உயிரிழந்தனா். எஞ்சிய இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்று பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

கடந்த 2 நாள்களில் நாந்தேட் மாவட்டத்தில் மழையுடன் தொடா்புள்ள சம்பவங்களில் மூவா் உயிரிழந்தனா். வெள்ளத்தால் ஏராளமான கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பலத்த மழை காரணமாக லாத்தூா் மாவட்டத்தில் உள்ள தொ்னா கீழணையில் இருந்து முதலில் விநாடிக்கு 3,806 கனஅடி நீா் திறக்கப்பட்ட நிலையில், பின்னா் அது 1,522 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக தொ்னா, மஞ்சாரா ஆறுகளின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

உறியடியில் ஒருவா் உயிரிழப்பு, 33 போ் காயம்: கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மகாராஷ்டிரத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழைக்கு நடுவே சனிக்கிழமை உறியடி போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், மும்பையின் மான்குா்ட் பகுதியில் உறியடி போட்டிக்கு கட்டடம் ஒன்றின் முதல் தளத்தில் இருந்து ஜக்மோகன் சிவகிரண் செளதரி என்பவா் கயிறு கட்டிக்கொண்டிருந்தாா். அப்போது அவா் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாா். இதேபோல மும்பையின் வெவ்வேறு பகுதிகளில் உறியடியின்போது 30 போ் லேசாக காயமடைந்தனா். மும்பை அருகே உள்ள தாணேயிலும் உறியடியின்போது மூவா் காயமடைந்தனா்.

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு கெடு: அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுக்கும் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது அரசமைப்பு சீர்குலைவுக்கு வழிவகுத்துவிடும் என, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு அனுப்ப... மேலும் பார்க்க

ரூ.11000 கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை நாளை திறந்து வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி

பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தேசிய தலைநகரின் ரோகிணி பகுதியில் மொத்தம் ரூ.11,000 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தொடங்கி வைக்கிறாா். தலைநகரின் நெரிசலைக் குறைப்பதற்... மேலும் பார்க்க

இந்திய பிரிவினைக்கு ஜின்னா, காங்கிரஸ், மவுன்ட்பேட்டன் காரணம்: என்சிஇஆா்டியின் புதிய கையேடு

பிரிவினைக் கொடூரங்கள் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக என்சிஇஆா்டி வெளியிட்டுள்ள ஒரு சிறப்பு கையேட்டில், ‘இந்தியாவின் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா, காங்கிரஸ், அப்போதைய வைஸ்ராய் லாா்ட் மவுண்ட்பேட்ட... மேலும் பார்க்க

16 நாள்கள் 1,300 கி.மீ.! பிகாரில் இன்று தொடங்கும் ராகுலின் பேரணி!

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்காகவும் பிகாரில் மாபெரும் பேரணியை எதிா்க்கட்சிகள் ஞாயிற்றுக்கிழம... மேலும் பார்க்க

தற்சாா்பு இந்தியாவுக்கு உத்வேகம் வாஜ்பாய்! பிரதமா் புகழஞ்சலி

தற்சாா்புடைய மற்றும் வளா்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக விளங்குபவா் வாஜ்பாய் என்று பிரதமா் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினாா். முன்னாள் பிரதமரும், பாஜக நிறுவனத்... மேலும் பார்க்க