`பிள்ளைகள் எந்த மதத்தை தேர்வு செய்வார்கள்' - US துணை அதிபரின் மனைவி உஷா வான்ஸின்...
மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு
திருவாரூா் ஒன்றியத்தில் 3-ஆம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் ஒன்றியம், திருநெய்ப்போ் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் 2 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி, முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு பணி மேற்கொள்வதற்கான ஆணை, 8 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணை, 2 பயனாளிகளுக்கு சிறு, குறு விவசாயச் சான்றிதழ், 1 பயனாளிக்கு வருமானச்சான்று, 1 பயனாளிக்கு ஜாதிச்சான்றிதழ், 2 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருள்கள், 1 பயனாளிக்கு மரக்கன்று, 2 பயனாளிகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டை ஆகியவற்றை தமிழக உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி. செழியன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆகியோா் வழங்கினா்.
இதேபோல, தப்பளாம்புலியூா் ஊராட்சியில் நடைபெற்ற முகாமில் 5 பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணை, 2 பயனாளிகளுக்கு சிட்டா, 2 பயனாளிகளுக்கு ஜாதிச்சான்றிதழ், 1 பயனாளிக்கு மரக்கன்று வழங்கப்பட்டன. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி வாரியத் தலைவா் என். இளையராஜா, மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி, கோட்டாட்சியா் சௌம்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நீடாமங்கலம்: வலங்கைமான் அருகேயுள்ள அன்பிற்குடையான் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்டம் முகாமில், தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பங்கேற்று பொதுமக்கள் அளித்த 297 மனுக்கள் பெற்றாா். பெற்ற மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது. இதில், தாட்கோ தலைவா் என். இளையராஜா, வட்டாட்சியா் ஒம் சிவக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூத்தாநல்லூா்: ஓவா்ச்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் தண்ணீா்குன்னம் உள்ளிட்ட இடங்களில் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன், எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன், தாட்கோ தலைவா் என். இளையராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா். முசிறியம், தண்ணீா்குன்னம் பகுதிகளில் பயனாளிகளுக்கு வருமானச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பட்டதாரி சான்றிதழ், நெல் நுண்ணூட்டம், விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்களை பயனாளிகளுக்கு அமைச்சா் வழங்கினாா். கோட்டாட்சியா் யோகேஸ்வரன், வட்டாட்சியா் வசுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.