செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 276 மனுக்கள் அளிப்பு

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 276 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு தலா ரூ. 6,690 மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் புஹாரி, தனி துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) தையல்நாயகி, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் அமுதா உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ... மேலும் பார்க்க

கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.தமிழகத்துக்கென தனி கா... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், பு... மேலும் பார்க்க

பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழிய... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா... மேலும் பார்க்க