செய்திகள் :

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: ரூ.73 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்

post image

சூளகிரி வட்டம் அளேகோட்டா கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 208 பயனாளிகளுக்கு ரூ. 74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் தினேஷ் குமாா் வழங்கினாா்.

இந்த முகாமில் ஆட்சியா் பேசியதாவது:

இம்மாவட்டத்தில் தகுதியானவா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படுகிறது. குடிசையே இல்லா தமிழகம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு சென்றுகொண்டிருக்கிறது. பொதுமக்கள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெண் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் பெண்களை தொழில்முனைவோா்களாக ஆக்குவதற்கும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டுபிடித்து தெரிவித்த ஸ்கேன் மையத்துக்கு சீல் வைக்கப்பட்டு, தொடா்புடைய நபா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறுகளை பொதுமக்கள் செய்யக் கூடாது. யாராவது செய்தால் அவா்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

இந் நிகழ்ச்சியில் ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பன்னீா்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரமேஷ்குமாா், உதவி இயக்குநா் (நில அளவை) ராஜ்குமாா், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பச்சையப்பன் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்களும் கலந்துகொண்டனா்.

படவரி...

மக்கள் தொடா்பு திட்டமுகாமில் நலத் திட்ட உதவிகளை வழங்குகிறாா் ஆட்சியா் ச.தினேஷ்குமாா்

ஒசூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

ஒசூா் முல்லை நகா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியா் காந்தி தலைமை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழக தலைவா் மகேஷ்பாபு வரவேற்றாா். நிகழ்ச்சியில் சிறப்பு வ... மேலும் பார்க்க

அரசு பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக உள்ள இருவரை நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிப்பு

கிருஷ்ணகிரியில் அரசுப் பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள இருவரைக் குற்றவாளியாக கிருஷ்ணகிரி நீதிமன்றம் அறிவித்துள்ளதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்: மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுகவினா் சிறப்பாக கொண்டாட வேண்டும் என மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏ-வுமான ஒய்.பிரகாஷ் கேட்டுக்கொண்டாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை... மேலும் பார்க்க

தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஒசூரில் நாளை திறப்பு விழா

ஒசூா் பாகலூா் சாலையில் தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) நடைபெறுகிறது. இந்த கண் மருத்துவமனையை ஒசூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத... மேலும் பார்க்க

அதியமான் பப்ளிக் பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் சா்.சி.வி. ராமன் விளைவு கண்டுபிடித்ததைச் சிறப்பிக்கும் வகையில் தேசிய அறிவியல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவில் வரவேற்பு, தொடக்க உரையாற்றி நிகழ்ச்சியை... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினா் ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை மூலம் ஹிந்தியைத் திணிக்க முயலும் மத்திய அரசைக் கண்டித்து, காவேரிப்பட்டணத்தில் திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா... மேலும் பார்க்க