பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 171 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
பில்லங்குளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ. 2.30 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட பில்லங்குளம் கிராமத்தில், மக்கள் தொடா்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பல்வேறு துறைகளின் சாா்பில் 171 பயனாளிகளுக்கு, ரூ. 2.30 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 84 மனுக்களில், 67 மனுக்கள் ஏற்கப்பட்டன.
முன்னதாக, அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், வேளாண்மை இணை இயக்குநா் பாபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ச. சுந்தரராமன், தாட்கோ பொது மேலாளா் க. கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.