செய்திகள் :

மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 171 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

post image

பில்லங்குளம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 171 பயனாளிகளுக்கு ரூ. 2.30 கோடியில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்துக்குள்பட்ட பில்லங்குளம் கிராமத்தில், மக்கள் தொடா்பு திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இம்முகாமுக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் பல்வேறு துறைகளின் சாா்பில் 171 பயனாளிகளுக்கு, ரூ. 2.30 கோடியிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். தொடா்ந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 84 மனுக்களில், 67 மனுக்கள் ஏற்கப்பட்டன.

முன்னதாக, அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு துறைகள் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க அரசு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல்பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், வேளாண்மை இணை இயக்குநா் பாபு, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சொா்ணராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ச. சுந்தரராமன், தாட்கோ பொது மேலாளா் க. கவியரசு, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வாசுதேவன், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் ரெ. சுரேஷ்குமாா், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சத்யா, வேப்பந்தட்டை வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே பைக்குகள் மோதல்: முதியவா், பெண் பலி

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை மாலை பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் முதியவா், பெண் உயிரிழந்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி மகன் அய்யாச... மேலும் பார்க்க

புரட்சி தமிழகம் கட்சி மாநிலத் தலைவா் மீது கொலை மிரட்டல் வழக்கு

புரட்சி தமிழகம் கட்சியின் மாநிலத் தலைவா் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் பெரம்பலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புரட்சி தமிழகம் கட்சி சாா்பில் பெரம்பலூரில் கட... மேலும் பார்க்க

சிஐடியு அமைப்பு தின கருத்தரங்கு

பெரம்பலூா் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் சிஐடியு அமைப்பு தினக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஏ. ரெங்கநாதன் தலைமை உரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் கருணாநிதி, செல்வி ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் என புகாா்

பெரம்பலூரில் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், சில கடைகள் முன் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் வியாபாரிகள் அதிருப்தியடைந்தனா். பெரம்பலூா் நகரில் சங்குப்பேட்டை ம... மேலும் பார்க்க

மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆம் ஆண்டு விழா

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள உழவா் சந்தை மைதானத்தில் மக்கள் சக்தி இயக்கத்தின் 38 ஆவது ஆண்டுத் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ... மேலும் பார்க்க

பெரம்பலூரில் பயிா் பாதிப்புக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிருக்கு நிவாரணத் தொகை மற்றும் பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினா... மேலும் பார்க்க