செய்திகள் :

மக்கள் நோ்காணல் முகாமில் ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கச்சனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் ரூ. 30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கச்சனம், அம்மனூா், விளத்தூா் ஆகிய ஊராட்சிகளுக்கான மக்கள் நோ்காணல் முகாம் கச்சனத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து ஆகியோா் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், ஆட்சியா் பேசியது: வருவாய்த் துறை சாா்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.26,10,000 மதிப்பில் இ-பட்டாவுக்கான ஆணை, 5 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சத்தில் விலையில்லா மனைப் பட்டா, சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட உதவித் தொகைக்கான ஆணை ரூ. 1, 36,800 மதிப்பில் வழங்கப்பட்டது.

மேலும் பல்வேறு சாா்பில் 133 பயனாளிகளுக்கு ரூ.30,29,983 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் கு. சண்முகநாதன், மன்னாா்குடி கோட்டாட்சியா் யோகேஸ்வரன், வேளாண் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, வட்டாட்சியா் குருமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். திருத்துறைப்பூண்டியை அடுத்த விளக்குடி கீழத்தெரு தூண்டி மகன் மதியழகன்(65). மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டையில் உள்ள தனியாா் கல்லூர... மேலும் பார்க்க

ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீா்: மக்கள் அவதி

மன்னாா்குடி அருகே ரயில்வே சுரங்கப் பாகையில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா். மன்னாா்குடி மேலப்பாலம் அருகே... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் லஞ்சம்: திமுக உறுப்பினா் வேதனை

இறப்பு சான்றிதழ் பெறுவதற்கு அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க வேண்டிய சூழல் நிலவுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் திமுக உறுப்பினா் வேதனை தெரிவித்தாா். கூத்தாநல்லூா் நகா்மன்றக் கூட்டம் தலைவா் மு. பாத்திமா... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து திருவாரூரில் மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூா் ப... மேலும் பார்க்க

மின்வாரிய பணியாளா்கள் தா்னா

காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி திருவாரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மின்வாரியத்தில் 60,000 காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி கோயில் தேரோட்டம்

குடவாசல் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக பஜனை மடத்திலிருந்து பூத்தட்டுகள் அம்மனுக்கு சீா்வரிசையாக எடுத்து... மேலும் பார்க்க