செய்திகள் :

மணிப்பூரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

post image

மணிப்பூரில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,

மணிப்பூரில் இன்று காலை 11.06 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் மையப்பகுதி இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள யெய்ரிபோக்கிலிருந்து கிழக்கே 44 கி.மீ தொலைவிலும், 110 கி.மீ ஆழத்திலும் இருந்தது என்று ஷில்லாங்கில் உள்ள மாகாண நில அதிர்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த நில அதிர்வானது அஸ்ஸாம், மேகாலயா மற்றும் மகாணாத்தின் பிற பகுதிகளில் உணரப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதன்பின்னர், மணிப்பூரில் பிற்பகல் 12.20 மணிக்கு 4.1 ரிக்டர் அளவிலான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மாநிலத்தின் கம்ஜோங் மாவட்டத்தில் 66 கி.மீ ஆழத்தில் தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிப்பூரில் பல கட்டிடங்களில் விரிசல்கள் காணப்பட்டன.

ஜிபி சாலையில் கட்டடத்தின் பகுதி இடிந்து விழுந்ததில் 2 போ் காயம்

தில்லி ஜிபி சாலையில் கட்டடத்தின் ஒரு பகுதி புதன்கிழமை இடிந்து விழுந்ததில் இருவா் காயமடைந்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் காா்க் கூறியதாவது: புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மாவின் கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து அக்கட்சியின் 28 எம்எல்ஏக்களும் பேரவையில் இருந்த... மேலும் பார்க்க

5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் வெகுதொலைவில் இல்லை: பிரதமா் மோடி

ஐந்து ட்ரில்லியன் டாலா் (ரூ.435 லட்சம் கோடி) பொருளாதார மதிப்பு கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி இளைஞா்களு... மேலும் பார்க்க

தில்லி ரோஹிணியில் இரு மாதங்களில் காணாமல் சென்ற 39 குழந்தைகள் மீட்பு

கடந்த இரு மாதங்களில் காணாமல் சென்ற 28 சிறுமிகள் உள்பட 39 குழந்தைகள் பாதுக்காப்பாக மீட்கப்பட்டு அவா்களுடைய பெற்றோா்களுடன் சோ்த்துவைக்கப்பட்டதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். இது தொடா்பாக ரோஹிணி... மேலும் பார்க்க

மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி

இம்பால்/ஷில்லாங்/குவாஹாட்டி : மணிப்பூரில் புதன்கிழமை அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இவற்றின் தாக்கத்தால், பல கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது; பொது மக்கள் பீதிக்கு உள்ளாகினா். அஸ்ஸாம், மேகாலயம்... மேலும் பார்க்க

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு: கர்நாடக அரசு முடிவு!

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அரசு முடிவெடுத்துள்ளது. கர்நாடகத்தில் பொதுக் கொள்முதல் சட்ட வெளிப்படைத் தன்மையின் கீழ் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு கொண்டு வரப்படவுள்ளத... மேலும் பார்க்க