செய்திகள் :

மணிப்பூரில் அதிரடி சோதனை! பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்...கிளர்ச்சியாளர் கைது!

post image

மணிப்பூரின் காக்சிங் மற்றும் கிழக்கு இம்பால் மாவட்டங்களில் பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் கிளர்ச்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காக்சிங் மாவட்டத்தின் டோக்பாசிங் மொய்ரங்கோம் மலைப்பகுதியில் நேற்று (ஏப்.9) சோதனை மேற்கொண்ட பாதுகாப்புப் படையினர் ஐ.ஈ.டி. எனும் நவீன வெடி குண்டு, கையெறி குண்டுகள், பல ரகங்களைச் சேர்ந்த ஏராளமான துப்பாக்கிகள் அதன் தோட்டக்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

இதேபோல், கிழக்கு இம்பால் மாவட்டத்தின் யாரால்பாத் பகுதியிலுள்ள பள்ளிக்கூடத்தின் எதிரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாசக்கார ஆயுதங்கள் அனைத்தும் பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், மீட்கப்பட்டுள்ள ஆயுதங்கள் போரோம்பாத் காவல் நிலையத்தில் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அம்மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தின் லாம்ஸாங் சந்தையின் அருகில் தடை செய்யப்பட்ட காங்லெய்பாக் கம்யூணிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 45 வயதுடைய கிளர்ச்சியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக, மணிப்பூர் முதல்வர் தனது பதவியை ராஜிநாமா செய்த பின்னர் கடந்த பிப்.13 ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவரின் ஆட்சியானது அங்கு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர், மணிப்பூரிலுள்ள கிளர்ச்சியாளர்கள் தாங்கள் சட்டவிரோதமாக வைத்திருக்கும் ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடித்த பொருள்களை ஒப்படைக்க அரசு விதித்திருந்த காலக்கெடுவானது கடந்த மார்ச்.6 ஆம் தேதி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:நாடு கடத்தப்பட்டார் தஹாவூா் ராணா! தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு!

மேல்பாதி திரௌபதியம்மன் கோயில் 2 ஆவது நாளாக திறப்பு: தரிசனம் செய்ய வராத மக்கள்!

விழுப்புரம் : சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்திலுள்ள அருள்மிகு திரௌபதியம்மன் கோயில் மக்கள் வழிபாட்டுக்காக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை திறக்கப்பட்ட... மேலும் பார்க்க

மீண்டும், மீண்டும்... அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கனிணிமையத்திற்கு ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: திட்டமிட்டபடி நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம்! - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டபடி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 3... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென இன்று(வியாழக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்... மேலும் பார்க்க

ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!

ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்த... மேலும் பார்க்க