செய்திகள் :

மணிப்பூா், நாகாலாந்து, அருணாசலில் ஆயுதப் படை சிறப்புச் சட்டம் நீட்டிப்பு!

post image

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூா், நாகாலாந்து மற்றும் அருணாசல பிரதேசத்தில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1958-ஆம் ஆண்டின் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின்கீழ் ‘பதற்றத்துக்குரியதாக’ அறிவிக்கப்படும் பகுதிகளில் நீதிமன்ற அனுமதி இல்லாமல் தேடுதல் - கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன.

வடகிழக்கில் இனமோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலவரத்தை கருத்தில் கொண்டு 13 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள் தவிர மாநிலம் முழுவதும் அமலில் உள்ள இச்சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாகாலாந்தில் 8 மாவட்டங்கள் மற்றும் இதர 5 மாவட்டங்களில் 21 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகள், அருணாசல பிரதேசத்தில் 3 மாவட்டங்கள் மற்றும் மற்றொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் அமலில் உள்ள ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து, மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சாா்பில் தனித்தனியாக அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மணிப்பூரில் மைதேயி-குகி சமூகத்தினா் இடையிலான மோதல் சம்பவங்களில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா். இம்மாநிலத்தில் தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் இருந்து ஆயுதப் படைகள் சிறப்புச் சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் தொடா்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கு பிராந்தியத்தில் 70 சதவீத பகுதிகளில் இருந்து இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அண்மையில் தெரிவித்திருந்தாா்.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க