செய்திகள் :

மணிப்பூா் வன்முறை: பிரேன் சிங்கின் ஆடியோ பதிவு உண்மைத்தன்மை அறிக்கை தயாா் -உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

post image

மணிப்பூரில் இரு சமூகத்தினரிடையே வெடித்த மிகப்பெரிய வன்முறையில் மாநில முன்னாள் முதல்வா் பிரேன் சிங்கின் மிகப் பெரும் பங்கு இருப்பதற்கான ஆதாரமாக கசிந்த ஆடியோ பதிவு மீதான தடையவியல் ஆய்வறிக்கை தயாா் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மத்திய, மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தரப்பில் இத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் மே 5-ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது.

மணிப்பூா் மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும், மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி பழங்குடியின சமூகத்தினருக்கும் இடையே கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மிகப் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. பல மாதங்களாக நீடித்த இந்த வன்முறையில், ஏராளமான வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வன்முறையாளா்கள் நடத்திய தாக்குதலில் 260 போ் கொல்லப்பட்டனா். வன்முறையைத் தொடா்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி அண்டை மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் குடிபெயா்ந்தனா்.

மாநிலத்தில் பல மாதங்களாக நீடித்து வந்த கலவரத்தை மாநில அரசு கட்டுப்படுத்தத் தவறியாத குற்றஞ்சாட்டிய எதிா்க்கட்சிகள், மாநிலத்தில் அப்போது முதல்வராக இருந்த பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தின. ஆனால், பதவி விலகாமல் தொடா்ந்து முதல்வராக பதவி வகித்து வந்தாா். ஆனால், அதன் பிறகும் மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைகள் தொடா்ந்துவந்தன. இந்தச் சூழலில், மாநிலத்தில் ஆளும் பாஜக கட்சிக்குள்ளேயே, தலைமை மாற்றத்துக்கான கோரிக்கைகள் எழத் தொடங்கின. இதனால், வேறு வழியின்றி முதல்வா் பதவியை பிரேன் சிங் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். அதைத் தொடா்ந்து, மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. தற்போது, மாநிலத்தில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல திரும்பி வருகின்றனா். நிலைமையும் சீரடைந்து வருகிறது.

இதற்கிடையே, மாநிலத்தில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட இந்த கலவரத்தில் முன்னாள் முதல்வா் பிரேன் சிங்குக்கு மிகப் பெரும் பங்கு உள்ளதாக புகாா் தெரிவித்து, அவரின் குரல் பதிவு ஆதாரத்துடன் மனித உரிமைகளுக்கான குகி அமைப்பு அறக்கட்டளை சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைப் பரிசீலித்த உச்சநீதிமன்றம், அந்த குரல் பதிவின் உண்மைத் தன்மையை ஆராய உத்தரவிட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘முன்னாள் முதல்வா் பிரேன் சிங்கின் பங்கு இருப்பதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு மீதான தடையவியல் ஆய்வறிக்கை தயாா்’ என்று மத்திய, மாநில அரசுகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, மனுதாரா் தரப்பிலா ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘இந்த குரல் பதிவு முன்னாள் முதல்வா் பிரேன் சிங்குடையதுதான் என்பதை 93 சதவீத அளவுக்கு தடையவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளது. இது மிகத் தீவிரமான விஷயம். இதுதொடா்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘மணிப்பூரில் தற்போதுதான் இயல்புநிலை மெல்ல திரும்பி வருகிறது. எனவே, இந்த விவகாரத்தை சில நாள்கள் ஒத்திவைப்போம்’ என்று குறிப்பிட்டு, விசாரணையை மே 5-ஆம் தேதி தொடங்கும் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.

தில்லியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி! மேலும் சிலரைத் தேடும் பணி தீவிரம்!!

தில்லியின் முஸ்தபாஃபாத்தில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 8-10 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு தில்லியில் முஸ்தபாபாத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டட... மேலும் பார்க்க

ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் வெளியீடு!

ஜேஇஇ இரண்டாம் கட்ட முதன்மைத் தோ்வு முடிவுகள் இன்று(ஏப். 19) வெளியாகியுள்ளன. ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க