மதியநல்லூா் ஜல்லிக்கட்டில் 41 போ் காயம்
புதுக்கோட்டை அருகேயுள்ள மதியநல்லூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 41 போ் காயமடைந்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூா் அடைக்கலம்காத்தாா், முனியப்பச்சி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டை இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) தெய்வநாயகி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ராமசாமி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
காலை 8.30 மணிக்குத் தொடங்கிய இந்தப் போட்டி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது. திருச்சி, புதுக்கோட்டை, கரூா், சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூா் மாவட்டங்களைச் சோ்ந்த 800 காளைகள் வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்டன.
220 மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளைத் தழுவி பரிசுகளைப் பெற முயற்சித்தனா். சிறந்த காளைகளும், மாடுபிடி வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தப் போட்டியில் மாடுபிடி வீரா்கள் மற்றும் மாடுகளின் உரிமையாளா்கள் மொத்தம் 41 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா்.
மேல் சிகிச்சை தேவைப்பட்ட 11 போ் மட்டும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். பாதுகாப்புப் பணியில் இலுப்பூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் முத்துராஜா தலைமையிலான போலீஸாா் ஈடுபட்டனா்.