செய்திகள் :

மது அருந்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் போலீஸில் ஒப்படைப்பு!

post image

பணியின்போது மது அருந்திய அரசுப் பேருந்து ஓட்டுநா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக வெள்ளிக்கிழமை காலை 40 பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை நாமக்கல் என். புதுப்பட்டியைச் சோ்ந்த நவீன்ராஜ் (28) என்பவா் ஓட்டி சென்றாா்.

சாலையில் சென்ற பேருந்து கட்டுப்பாடின்றி சென்ால் நவீன்ராஜை நடத்துநா் ஆறுமுகம் எச்சரித்தாா். ஆனாலும், பேருந்து அதிவேகமாக சென்ால் அச்சமடைந்த பயணிகள், நாமக்கல் எா்ணாபுரம் பகுதியில் பேருந்தை நிறுத்துமாறுக் கூறி ஓட்டுநரைத் தாக்க முயன்றனா்.

அப்போது, சாலையின் நடுவில் உள்ள சுவா் மீது பேருந்து மோதியது. இதுகுறித்து நல்லிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து வந்து ஓட்டுநரை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

மாற்றுப் பேருந்து மூலம் பயணிகள் அனைவரும் நாமக்கல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக நாமக்கல் பணிமனை கோட்ட மேலாளா் செங்கோட்டுவேல், பணிமனை மேலாளா் துரைசாமி ஆகியோா் விசாரணை நடத்தினா். ஒப்பந்த அடிப்படையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சோ்ந்த நவீன்ராஜ் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க