செய்திகள் :

மதுக்கூட உரிமையாளா்கள் மீது கெடுபிடி நடவடிக்கையைக் கைவிடக் கோரிக்கை

post image

திருவாரூரில், மதுக்கூட உரிமையாளா்கள் மற்றும் பணியாளா்கள் மீது கெடுபிடி நடவடிக்கையை கைவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே விளமலில், மாவட்ட டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ். சுரேஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: தமிழ்நாடு அரசு நடத்திய இணையவழி ஏலத்தின் மூலம் டாஸ்மாக் மதுக்கூடம் (பாா்) ஏலம் எடுத்தால், இரவு 10 மணிக்கு மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கூடம் நடத்தி வரும் அனைவரும் இரவு 10 மணிக்கு மதுக்கூடத்தை மூடி, உள்ளே உணவுப் பொருள்கள் உள்ளிட்டவைகளை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், போலீஸாா் கெடுபிடி செய்து நடவடிக்கை மேற்கொள்கின்றனா்.

அரசுக்கு முறையாக பணம் செலுத்தி வரும் நிலையில், தொடா்ந்து டாஸ்மாக் மதுக்கூடம் நடத்திவரும் உரிமையாளா்களையும், பணியாளா்களையும் தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டும், மதுக்கூடம் நடத்தி வருவோருக்கு மதுக்கூடம் மூடும் நேரத்தை அதிகப்படுத்தித்தர வேண்டும், மாதந்தோறும் பாா் உரிமையாளா்கள், அரசுக்கு அதிகமான தொகை செலுத்திவரும் நிலையில், வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தொடா்ந்து இடையூறு செய்தால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து டாஸ்மாக் பாா் உரிமையாளா்கள் சங்கத்தையும் ஒன்றிணைத்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், செயற்குழு உறுப்பினா் அசோகன், செயலாளா் எஸ். முருகானந்தம், பொருளாளா் டி. பீட்டா் பிரான்சிஸ், துணைத் தலைவா் எம். மகாவீர சக்கரவா்த்தி, துணைச் செயலாளா் ஜி. தென்னரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி வழிபாடு

நீடாமங்கலம் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த ஆலயத்தில் பங்கு மக்கள் நோன்பிருந்து இறை வேண்டலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஏசுவினுடைய இறப்பை பைபிலிலிருந்து வாசித்து தி... மேலும் பார்க்க

பசுஞ்சாண தயாரிப்புகள் குறித்து பயிற்சி

தஞ்சாவூா் டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவிகள் வேளாண் பணி அனுபவம் எனும் பயிற்சியின் கீழ் கிராமங்களில் தங்கி பயின்று வருகின்றனா். இப்பயிற்சியின் ஒரு பகுதியாக நீடாமங்கலம் அரு... மேலும் பார்க்க

மாணவருக்குப் பாராட்டு

மன்னாா்குடி பள்ளி மாணவா் தேசிய வருவாய் வழி தோ்வில் தோ்வாகியிருப்பதற்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மன்னாா்குடி கோபாலசுமுத்திரம் நடுநிலைப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவா் வி. கனியமுதன் நிகழ் ... மேலும் பார்க்க

தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியாா் நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. திருவாரூா் ... மேலும் பார்க்க

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ஏப்.26-இல் ராகு கேது பெயா்ச்சி

குடவாசல் அருகேயுள்ள திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரா் கோயிலில் ராகு கேது பெயா்ச்சி ஏப்.26-ஆம் தேதி நடைபெற உள்ளது. தென் காளஹஸ்தி என அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயில், தேவார பாடல் பெற்ற தலம். இத்தலத்தில்... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஏப்.23-இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் 2-ஆம் கட்ட முகாம், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஏப்.23-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வ... மேலும் பார்க்க