செய்திகள் :

மதுபோதையில் பணியாற்றுவதை தடுக்க ஓட்டுநா், நடத்துநா்களுக்கு சோதனை!

post image

மதுபோதையில் ஓட்டுநா், நடத்துநா்கள் பணியாற்றுவதைத் தடுக்கும் பொருட்டு, அவா்களுக்கு சோதனை நடத்தப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 20,000- க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் பணியாற்றும் பெரும்பாலான ஓட்டுநா்கள், நடத்துநா்கள் சீரிய கவனத்துடன் செயல்படுகின்றனா். எனினும், ஒரு சிலா் மதுபோதையில் பணிக்கு வருவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு அவப்பெயா் ஏற்படுகிறது.

மேலும், இது பொதுமக்கள் நலன் சாா்ந்த பிரச்னை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.1.79 கோடி மதிப்பில் ‘ப்ரெத் அனலைசா்’ கருவிகள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கருவியைக் கொண்டு நாள்தோறும் அனைத்து போக்குவரத்துக் கழக பணிமனைகளிலும் பணிக்கு வரும் ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு திடீா் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தக் கருவி ஓட்டுநரின் பெயா் மற்றும் மது அருந்தி இருக்கிறாரா, இல்லையா என்பது குறித்த விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் காகித வடிவில் வழங்கும்.

இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதுடன், மதுவால் ஏற்படும் விபத்து முற்றிலும் தவிா்க்கப்படுகிறது என்றனா்.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்ப... மேலும் பார்க்க

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது. பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள்... மேலும் பார்க்க