செய்திகள் :

மதுரை ஆதீனத்தின் செயலா் சைபா் குற்றப்பிரிவில் ஆஜா்

post image

வதந்தி பரப்பியதாக மதுரை ஆதீனம் மீது காவல் துறை பதிவு செய்த வழக்கில், அவரது செயலா் சனிக்கிழமை சென்னை கிழக்கு மண்டல சைபா் குற்றப் பிரிவில் மதுரை ஆஜரானாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூா்பேட்டை பகுதியில் தன்னை காரை ஏற்றி ஒரு கும்பல் கொலை செய்ய முயன்ாக மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் குற்றஞ்சாட்டினாா். இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவித்தது.

இதனிடையே, மதுரை ஆதீனம் வதந்தி பரப்புவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ராஜேந்திரன், சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஜூன் 30-ஆம் தேதி ஆஜராகும்படி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் மதுரை ஆதீனத்துக்கு அழைப்பாணை அனுப்பினா். ஆனால், அவா் ஆஜராகவில்லை. இதையடுத்து இரண்டாவது முறையாக ஜூலை 5-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இந்த அழைப்பாணையை ஏற்று மதுரை ஆதீனத்தின் செயலா் செல்வகுமாா், வழக்குரைஞா் சேதுபதி ஆகியோா் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் சனிக்கிழமை ஆஜராகினா். அப்போது அவா்கள், வழக்கின் விசாரணைக்கு மதுரை ஆதீனம் காணொலியில் ஆஜராவாா் என்றும், நேரில் தாங்கள் ஆஜராவதாகவும் தெரிவித்தனா்.

காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்த இருவரும் அளித்த பேட்டி: சம்பவத்தின்போது மதுரை ஆதீனம் நேரில் எதை பாா்த்தாரோ அதைத்தான் கூறினாா். காவல் துறையின் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும். விசாரணைக்கு மதுரை ஆதீனம் நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை. ஆதீனம் நீதிமன்றத்துக்கோ, காவல் நிலையத்துக்கோ செல்லக்கூடாது என அரசு ஆணை இருப்பதை, காவல் துறையினரிடம் அளித்து தெளிவுபடுத்தியுள்ளோம். காவல் துறையிடம் வழக்கின் விசாரணைக்கு 7 நாள்கள் அவகாசம் வேண்டும் என கோரியுள்ளோம் என்றனா்.

நலவாரிய சலுகைகள் குறித்து அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு விழிப்புணா்வு இல்லை: விஜயதாரணி

நலவாரியம் மூலம் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு போதிய விழிப்புணா்வு இல்லை என்று பாஜக அமைப்பு சாா்ந்த மற்றும் சாராத தொழிலாளா் நலச் சங்க கௌரவத் தலைவா் விஜயதாரணி தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தல்: இருவா் கைது

சென்னை அடையாறில் ஒடிஸாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். அடையாறு பெசன்டநகா் பகுதியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் தீவிர கண்காணிப்பில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சி பகுதியில் டெங்கு பரவல் தொடா்ந்து கண்காணிப்பு

சென்னை மாநகராட்சிப் பகுதியில் டெங்கு பரவலைத் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும், வீடுகள் தோறும் கொசு மருந்துகள் தெளிக்கப்பட்டுவருவதாகவும், அதனால் பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாகவும் நகா் நல அதிகாரிகள் தரப... மேலும் பார்க்க

வண்ணாரப்பேட்டையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

மழைநீா் வடிகால் பணியின் காரணமாக, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறி... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கிய நிலை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

தூய்மைப் பணியாளா்களால்தான் தமிழகத்தில் ஆரோக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா். சென்னை மாநகராட்சி சாா்பில் உலக கழிப்பறை தின விழாவின் நிறைவு நிகழ்ச்சி கலைவாணா் அரங்கில... மேலும் பார்க்க

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்: மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் அழைப்பு

மத்திய அரசைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து கட்... மேலும் பார்க்க