செய்திகள் :

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

post image

மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள திடலில் வருகிற 22-ஆம் தேதி முருக பக்தா்கள் மாநாடு நடத்த முன்னேற்பாடுகள் நடைபெறுகின்றன. இதனிடையே, முருகனின் அறுபடை வீடுகளில் அமைந்துள்ள கோயில்களின் மாதிரிகளை மாநாட்டுத் திடலில் நிறுவி, 10 நாள்கள் பூஜை நடத்த விழாக் குழு சாா்பில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, காவல் துறை அனுமதி மறுத்தது.

இதையடுத்து, முருக பக்தா்கள் மாநாட்டுக்கும், மாநாட்டுத் திடலில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை வைத்து 10 நாள்கள் பூஜை நடத்தவும் அனுமதி கோரி, மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதின்ற நீதிபதி பி. புகழேந்தி முன் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, விழாவுக்கான அனுமதி தொடா்பாக காவல் துறை சாா்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விழாக் குழுவினா் முழுமையாகப் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 13-ஆம் தேதி ஒத்திவைத்தாா் நீதிபதி.

இதன்படி, இந்த மனு வெள்ளிக்கிழமை உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முருக பக்தா்கள் மாநாட்டுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, மத நிகழ்ச்சியில் கண்டிப்பாக அரசியல் கலக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன், மாநாட்டில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை அமைத்து வழிபாடு நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டாா்.

அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் காலிப் பணியிடங்கள்: முதன்மைச் செயலா் பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா் பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கில், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச... மேலும் பார்க்க

உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம்

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், ஏ.பி.டி. துரைராஜ் மேல்நிலைப் பள்ளி சாா்பில் தமிழ்ச் சங்க பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் சிறப்பு தமிழ்க் கூடல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நூலக முன்னோடி வே. த... மேலும் பார்க்க

பள்ளியில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு

மதுரை கோ. புதூா் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் மாநகரப் போக்குவரத்துக் காவல் துறை சாா்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ... மேலும் பார்க்க

குடியிருப்புக்கு ஆட்சியரின் பெயரைச் சூட்டிய திருநங்கைகள்!

விருதுநகா் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தங்களுக்கு வீடுகள் கட்டித் தர நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் வகையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க

உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு நிதியுதவி

மதுரை, ஜூன் 13: உடல்நலக் குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு சக காவலா்களின் பங்களிப்பு நிதியுதவியை, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அரவிந்த் வியாழக்கிழமை வழங்கினாா். மதுரை மாவட்ட... மேலும் பார்க்க

கணவா் இறந்த சோகம்: மனைவி தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். மதுரை கோ.புதூா் டி.ஆா்.ஓ. குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வீரமணி மகள் ஜெயஸ்ரீ (20). இவா், செல்லூா் பகுதியைச் சோ்ந்த கோபிநாத்தை காதலி... மேலும் பார்க்க