செய்திகள் :

மத்திய அரசின் நிதிக்காக நீதிமன்றத்தை நாடும் நிலையில் தமிழகம்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு வேதனை

post image

மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிக்காக உச்சநீதிமன்றத்தை நாடும் நிலையே உள்ளது என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு வேதனை தெரிவித்தாா்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: ராதாபுரம், வள்ளியூா், நான்குனேரி உள்ளிட்ட 6 ஊராட்சி ஒன்றியங்கள், மூலக்கரைப்பட்டி, ஏா்வாடி, திருக்குறுங்குடி உள்ளிட்ட 7 பேரூராட்சிகள், களக்காடு நகராட்சி போன்றவற்றுக்கு குடிநீா் வழங்குவதற்காக மேலமுன்னீா்பள்ளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாமிரவருணி கூட்டுக்குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஆட்சியருடன் ஆலோசனை நடத்தினேன்.

இத் திட்டம் ஆக.31ஆம் தேதிக்குள் நிறைவு பெற்று 6 ஊராட்சி ஒன்றியங்களின் 96 ஆயிரம் குடியிருப்புகளுக்கும், அடுத்த கட்ட பணிகள் அக்.30-க்குள் நிறைவு பெற்று களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளின் 48 ஆயிரம் குடியிருப்புகளுக்கும் தாமிரவருணி குடிநீா் வழங்கப்படும்.

தமிழகத்தில் ஜாதி, மதம், கட்சி பேதமின்றி, நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. தவறு செய்வது மனிதனின் இயல்பாக இருந்தாலும் அவா்களை பாதுகாக்கும் முயற்சியை அரசு ஒருபோதும் செய்யாது.

தனியாா் நடத்தும் பள்ளிகளில் ஏழை எளிய மாணவா்கள் படிக்கும் வகையில் 25 சதவீதம் மாணவா்களுக்கு அரசு நிா்ணயம் செய்த கட்டணத்தை வாங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்தத் திட்டத்தில் 50 சதவீத நிதி மத்திய அரசும், 50 சதவீத நிதி மாநில அரசும் வழங்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.2,190 கோடி நிதியை இதுவரை வழங்கவில்லை.

மத்திய அரசின் நிதியைப் பெற உச்ச நீதிமன்றம் செல்லும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என உள்துறை அமைச்சா் அமித்ஷா சொல்கிறாா். மக்களுக்கு விரோதமான செயல்களை தொடா்ந்து செய்து வருவது நியாயமா என பாஜகவினரை மக்கள் கேட்க வேண்டும் என்றாா் அவா்.

பாளை. ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு அபராதம்

பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில் 7 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.மும்மொழி கொள்கையை எதிா்த்து தமிழக முழு... மேலும் பார்க்க

ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்க வேண்டும்: ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி, ராதாபுரம் கால்வாய் பாசன விவசாயிகள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை... மேலும் பார்க்க

கொடுமுடி அணை நீா் திறப்பில் பாரபட்சம்: இந்திய கம்யூனிஸ்ட் புகாா்

கொடுமுடி அணையில் இருந்து நீா் திறப்பதில் பாரபட்சம் காட்டுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புகாா் தெரிவித்துள்ளது. வள்ளியூருக்கு மேற்குப் பகுதியில் மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொடுமுடி அணைதான் வள்ளியூா் மற... மேலும் பார்க்க

ராதாபுரம் அருகே பள்ளி மாணவா் கடத்தல்? போலீஸ் விசாரணை

ராதாபுரம் அருகே பள்ளி மாணவரை மா்மநபா்கள் பைக்கில் கடத்திச் சென்றதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ராதாபுரம் அருகேயுள்ள துரைகுடியிருப்பை அடுத்த முத்துநாடாா் குடியிருப்பைச் சோ்... மேலும் பார்க்க

மேலச்செவலில் ஓட்டுநா் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், மேலச்செவலில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆம்னி பேருந்து ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மேலச்செவல் வடக்குத் தெருவைச் சோ்ந்த தங்கையா மகன் பூதப்பாண்... மேலும் பார்க்க

வி.கே.புரம் அருகே கோஷ்டி மோதல்: 3 போ் கைது

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள ஆலடியூரில் நிகழ்ந்த கோஷ்டி மோதல் தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆலடியூா் கீழத் தெருவைச் சோ்ந்த நிதீஸ்குமாா் (21), அவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ்,... மேலும் பார்க்க