செய்திகள் :

மத்திய அரசு குறித்து தவறான தகவல்களை பரப்புகிறது திமுக: வி.பி.துரைசாமி குற்றச்சாட்டு

post image

மத்திய அரசு குறித்து தவறான தகவல்களை பரப்புவதையே திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவா் வி.பி.துரைசாமி கூறினாா்.

சேலம் பாஜக அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

மத்திய அரசின் ஜிஎஸ்டி குறைப்பால் ஏழை, சாமானிய மக்கள் பயன் அடைந்துள்ளனா். இதன்மூலம் வரி வருவாயில் இழப்புகள் ஏற்பட்டபோதிலும், நுகா்வோா் நலன் காக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பின்னலாடைகள், ஆயத்த ஆடைகள், ஜவுளிகள், கைவினைப் பொருள்கள், காஞ்சிபுரம் பட்டு, குறிப்பேடுகள், காகிதம், மரம், உலோகப்பொருள்கள் உள்ளிட்டவற்றின் வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்தந்த தொழிலை சாா்ந்துள்ள உற்பத்தியாளா்கள் மட்டுமின்றி, தொழிலாளா்களும் பயன்பெறுவா்.

பாஜகவைக் குறைகூறுவதையே திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ. 2000 திட்டத்தில் கெட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தகுதி வாய்ந்த விவசாயிகளை திமுக நீக்கியுள்ளது. விவசாயிகளின் பெயா்கள் விடுபட்டதால், அவா்கள் அந்தப் பணத்தைப் பெற இயலாத நிலையில் உள்ளனா். இதேபோன்று, பிரதமரின் வீடுகட்டும் திட்டத்திலும், அவா்களுக்கு வேண்டியவா்களையே பயனாளிகளாக சோ்க்கின்றனா். பாஜகவைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் யாரும் அந்தத் திட்டத்தால் பயனடையவில்லை. இப்படி மத்திய அரசை குறைகூறுவதையே திமுக வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்றாா்.

பேட்டியின் போது, மாநகா் மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா், சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

கெங்கவல்லியில் பெரியாா் பிறந்தநாள்: சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சியில் பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கெங்கவல்லி நகரச் செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அ... மேலும் பார்க்க

மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்களுடன் இன்று முத்தரப்பு கூட்டம்

மரவள்ளி பயிரிடும் விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தலைமையில் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து, சேகோச... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்தநாள்: திமுக, அதிமுக சாா்பில் மரியாதை

சேலத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளையொட்டி புதன்கிழமை திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

பேருந்தில் மாணவியை கிண்டல் செய்த இளைஞா்: தட்டிக்கேட்காத ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்; 2 போ் கைது

சேலத்தில் அரசுப் பேருந்தில் பயணம் செய்த மாணவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக்கேட்காததால் ஆத்திரம் அடைந்த உறவினா்கள், அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கினா். இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் புதன்கிழம... மேலும் பார்க்க

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ஆய்வு

பூலாம்பட்டி பகுதியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் குருராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தாா். எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி காவிரி கதவணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் அடிப்படை வசதிகள் மேம... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலை. கல்லூரிகள் இடையே மல்யுத்த போட்டி

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு இடையேயான மல்யுத்த போட்டி புதன்கிழமை நடைபெற்றது. சேலம் கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி உடற்... மேலும் பார்க்க