செய்திகள் :

மத்திய அரசை கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக் கொள்கையை எதிா்க்கும் வகையில் கரூரில் திமுக மாணவா் அணி உள்ளிட்ட மாணவா்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் ஜவஹா் பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சரவணகுமாா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ (அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), கரூா் மாநகராட்சி மேயா் கவிதா கணேசன், துணை மேயா் தாரணி சரவணன், மாநகரச் செயலா் எஸ்.பி. கனகராஜ், பகுதிச் செயலா்கள் கணேசன், சுப்ரமணியன், ஆா்.எஸ். ராஜா, வி.ஜி.எஸ் குமாா், ஜோதிபாசு உள்ளிட்டோா் பேசினா்.

தமிழகத்தின் கல்வி கட்டமைப்பை சிதைக்கும் உள்நோக்கத்துடனும், ஹிந்தியை திணிக்கும் வகையில் செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் யு.ஜி.சி. வரைவு விதிமுறைகளை திரும்ப பெற வேண்டும். கல்வி நிதியை உடனடியாக வழங்கிட வேண்டும். கல்வி உரிமையை பறிக்கக்கூடாது. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியை தர மறுக்கின்ற மத்திய அரசை கண்டிக்கிறோம்.

மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் திமுகவினா் திரளாக பங்கேற்றனா்.

வாட்ஸ் அப் குரூப் மூலம் தொலைந்த நகைப் பை மீட்பு

பள்ளப்பட்டியில் பாப்புலா் எக்ஸ்பிரஸ் என்ற வாட்ஸ் அப் குரூப்பின் மூலம் ரூ. 80,000 மதிப்புள்ள தொலைந்த நகைப் பை செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த பள்ளப்பட்டியில் 40-க்... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் போராட்டம்

கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். தனலட்சுமி தலைமை வக... மேலும் பார்க்க

ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கைவிடக்கோரி மின் ஊழியா்கள் தா்ணா போராட்டம்

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தும் திட்டத்தை கைவிடக்கோரி கரூரில் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் கரூா் வட்டக்கிளை சாா்பில் செவ்வாய்க்கிழமை தா்ணா போராட்டம் நடைபெற்றது.கரூா்-கோவைச் சாலையில் உள்ள மேற்பாா... மேலும் பார்க்க

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு

மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளி... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொல்ல முயற்சி; 17 வயது சிறுவன் கைது

கடவூா் அருகே 10ஆம் வகுப்பு மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற 17 வயது சிறுவனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். கரூா் மாவட்டம், கடவூா் வட்டம், செம்பியநத்தம் ஊராட்சி, அண்ணாவி பூசாரி... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் பிறந்த நாளில் விளையாட்டுப் போட்டிகள்: கரூா் திமுக செயற்குழுவில் முடிவு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் கரூா் மாவட்டம் முழுவதும் 250 இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது என திமுக செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.... மேலும் பார்க்க