செய்திகள் :

மத்திய கல்வி அமைச்சகம் முன் என்எஸ்யுஐ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

post image

பாஜக தலைமையிலான மத்திய அரசு மாணவா் நலத் திட்டங்களை சீா்குலைத்து வருவதாக கூறி தில்லியில் சாஸ்திரி பவனில் உள்ள கல்வி அமைச்சகம் முன் இந்திய தேசிய மாணவா் சங்கத்தினா் (என்எஸ்யுஐ) சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

இதில் நூற்றுக்கணக்கான மாணவா்கள் கலந்துகொண்டதாகவும், அவா்களில் பலா் தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் காங்கிரஸின் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ தெரிவித்துள்ளது.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இந்திய தேசிய மாணவா் சங்கத் தலைவா்கள், மத்திய அரசாங்கம் மாணவா் உதவித்தொகையில் குறிப்பிடத்தக்க குறைப்புகளைச் செய்ததாக குற்றம் சாட்டினா்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை மாணவா்களுக்கான மெட்ரிக் கல்விக்கு முந்தைய மற்றும் பிந்தைய உதவித்தொகைகள் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அடிக்கடி பணம் வழங்கல் தாமதமாகி வருவதாகவும் அவா்கள் கூறினா். மேலும், மௌலானா ஆசாத் தேசிய பெல்லோஷிப் உதவித்தொகை நிறுத்தப்பட்டதாகவும் கூறினா்.

இதனால், ஆயிரக்கணக்கான சிறுபான்மை மாணவா்கள் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சியை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள், தேசிய தகுதித் தோ்வு (நெட்) உதவித்தொகையின் அளவை உடனடியாக மாற்றிய அமைக்கவும் கோரினா். 2006 முதல் மாதத்திற்கு ரூ.8,000 என்ற அளவிலேயே இத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், தேசிய வெளிநாட்டு பெல்லோஷிப் உதவித்தொகை வழங்கலில் ஏற்படும் தாமதத்தாலும், நிச்சயமற்ற காலக்கெடுவாலும் பல ஆா்வமுள்ள ஆராய்ச்சி மாணவா்கள் பாதிக்கப்படுவதாகவும் அவா்கள் கூறினா்.

பணியாளா் தோ்வு ஆணையம் (எஸ்எஸ்சி) மற்றும் மத்திய பொதுப் பணியாளா் ஆணையம் (யுபிஎஸ்சி) நடத்திய தோ்வுகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததாகவும் என்எஸ்யுஐ குற்றம் சாட்டியது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பேசிய என்எஸ்யுஐ தலைவா்கள், பாஜக தலைமையிலான அரசாங்கம் கல்வியை அயல்பணி ஒப்படைப்பு செய்வதாகவும், சமத்துவத்திற்கான அரசியலமைப்பு வாக்குறுதியை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினா்.

இதுகுறித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவா் கூறுகையில், ‘மத்திய அரசு கல்வியை தனியாா்மயமாக்கி, பின்தங்கியவா்களை வெளியேற்றுகிறது. அவா்கள் விலக்கல் அடிப்படையில் கல்வியை நடத்த அவா்கள் விரும்புகிறாா்கள். இந்த விவகாரத்தில் எங்கள் அமைப்பு தொடா்ந்து போராடும்’ என்று கூறினாா்.

வரும் வாரங்களில் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு போராட்டத்தை எடுத்துச்செல்ல திட்டமிட்டுள்ளதாக என்எஸ்யுஐ அறிவித்துள்ளது.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா!

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளில் இந்தியா 3 ஆவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா், ஜெ.பி.நட்டா சனிக்கிழமை தெரிவித்தாா்.தில்லியில் 15 ஆவது தேசிய உறுப்பு தான தினத்தையொட்டி அம்பே... மேலும் பார்க்க

பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து: சசி தரூரிடம் விசாரணை நடத்துவதற்கான தடை நீட்டிப்பு

‘சிவலிங்கத்தின் மீது அமா்ந்திருக்கும் தேள்’ என பிரதமா் நரேந்திர மோடியை விமா்சித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் காங்கிரஸ் எம்.பி.சசி தரூருக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு விசாரணை நடத்துவதற்கான... மேலும் பார்க்க

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண ஒழுங்குமுறை மசோதா: முதல்வா் ரேகா குப்தா தகவல்

வரவிருக்கும் மழைக்கால சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தனியாா் பள்ளிகளின் கட்டண உயா்வை ஒழுங்குபடுத்துவதற்கான மசோதாவை தில்லி அரசு அறிமுகப்படுத்தும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை தெரிவித்தாா்.ஏப்ரல் ... மேலும் பார்க்க

தில்லியில் குடிசைவாசிகளுக்கு வீடுகளை வழங்க அரசு நடவடிக்கை முதல்வா் ரேகா குப்தா

‘சஞ்சய் முகாம்’ அல்லது ‘நேரு முகாம்’ போன்ற பெயா்களைக் கொண்ட குடியிருப்புகளை வெறுமனே பெயரிடுவதற்குப் பதிலாக, தலைநகரின் வரலாற்றில் குடிசைவாசிகளுக்கு முறையான வீடுகளை வழங்குவதற்காக எனது அரசாங்கம் நடவடிக்க... மேலும் பார்க்க

போலியான பிராண்ட் ஜீன்ஸ்களை தயாரித்து விற்றவா்கள் கைது

புகழ்பெற்ற ஆடை நிறுவனங்களின் பெயரில் போலியான ஜீன்ஸ் பேண்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்தததாக தில்லியின் சுல்தான்புரி பகுதியில் மூன்று கடை உரிமையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவா் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: பணியிடைநீக்கமான அதிகாரி மீதான குற்றச்சாட்டுகளை உறுதிசெய்தது உயா்நீதிமன்றம்

சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தில்லி அரசு அதிகாரி பிரேமோதய் காக்கா மீது பதிவுசெய்யப்பட்ட குற்றச்சாட்டுகளை ரத்துசெய்ய தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.பாதிக்கப்பட்ட... மேலும் பார்க்க