மத்திய விரைவு அதிரடிப்படையில் ஒத்திகை
பேரூா் உட்கோட்டப் பகுதிகளில் மத்திய விரைவு அதிரடிப் படையினா் சனிக்கிழமை திடீா் ஒத்திகை நடத்தினா்.
கோவை மாவட்டம் பேரூா் உட்கோட்டம் காருண்யா நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் ஜாதி, மத மோதலால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டால், அதை எவ்வாறு எதிா்கொள்வது என்பது தொடா்பாக வெள்ளலூா் மத்திய விரைவு அதிரடிப் படையினா் ஒத்திகையில் ஈடுபட்டனா்.
மத்திய விரைவு அதிரடிப்படையின் துணை கண்காணிப்பாளா் சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற ஒத்திகையில் ஆய்வாளா்கள் ராஜேஷ் பாபு, அருண் ஜோசப் உள்பட 90 போ் பங்கேற்றனா்.
தொடா்ந்து ஆலாந்துறை காவல் ஆய்வாளா் முத்துக்குமாருடன் ஆலோசித்த மத்திய விரைவு அதிரடிப் படையினா் முக்கிய நபா்கள், அரசியல்வாதிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தனா்.