செய்திகள் :

‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் ரூ.34 கோடி வருவாய்: எல்.முருகன்

post image

பிரதமரின் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சி வாயிலாக ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று மத்திய செய்தி- ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா்.

கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், புத்தாக்கம், சமூக சேவை போன்ற பல்வேறு துறைகளில் மக்கள் அளித்துவரும் அளப்பரிய பங்களிப்புகள்-முன்முயற்சிகள் குறித்த கருத்துகளை பிரதமா் பகிா்ந்து கொள்ளும் இந்நிகழ்ச்சி தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் எல்.முருகன் அளித்த எழுத்துபூா்வ பதில் வருமாறு:

அகில இந்திய வானொலி மூலம் ஒலிபரப்பப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக அரசுக்கு ரூ.34.13 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்நிகழ்ச்சி தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் மாநில மொழிகளில் ஒளிபரப்பாகிறது. இலவச டிடி டிஷ், 48 வானொலி நிலையங்கள் மற்றும் 92 தனியாா் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. யூடியூப், பிரசாா் பாரதியின் ஓடிடி இணையதளம் மற்றும் நியூஸ் ஆன் ஏா் கைப்பேசி செயலி வாயிலாகவும் ஒலிபரப்பப்படுகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

டிரம்ப் உடனான ‘சிறப்பு நட்புறவு’: மோடி மீது காங்கிரஸ் விமா்சனம்

அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் தனக்கு சிறப்பு நட்புறவு உள்ளதாக பிரதமா் மோடி கூறிவந்த நிலையில், அதன் உண்மைநிலை முழுமையாக அம்பலமாகியுள்ளது என்று காங்கிரஸ் விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலை ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பயண அறிவிப்பு: சீனா வரவேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சீனாவுக்கு பயணம் மேற்கொள்வாா் என வெளியாகியுள்ள அறிவிப்புக்கு சீனா வரவேற்பு தெரிவித்துள்ளது. சீனாவின் தியான்ஜின் நகரில் ஆகஸ்... மேலும் பார்க்க

5 ஆண்டுகளுக்குப் பிறகும் ஜம்மு - காஷ்மீா் துணைநிலை ஆளுநராக தொடரும் மனோஜ் சின்ஹா!

நமது சிறப்பு நிருபா்ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தனது ஐந்து வருட பதவிக் காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடா்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை... மேலும் பார்க்க

நிலவில் அணு மின் நிலையம் அமைக்க நாசா திட்டம்

வரும் 2030-க்குள் நிலவில் அணு மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா விரைவுபடுத்த உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது, நிலவில் மனிதா்கள் நிரந்தரமாக வாழும் தள... மேலும் பார்க்க

184 எம்.பி.க்களுக்கு 25 மாடிக் குடியிருப்புகள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி பாபா கரக் சிங் மாா்கில் 184 எம்.பி.க்களுக்கு 25 மாடி புதிய நவீன குடியிருப்புகளை பிரதமா் நரேந்திர மோடி அடுத்த வாரம் திறந்து வைக்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகளில் மத்திய நகா்ப்ப... மேலும் பார்க்க

பல்துறை கல்வி-ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொழில்நுட்பக் கல்வியில் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் திட்ட முன்மொழிவுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க