செய்திகள் :

மனநல சிகிச்சைக்கு பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்ட வட மாநிலத்தவா்கள்

post image

கிருஷ்ணகிரியில் மனநல சிகிச்சைக்கு பிறகு, வட மாநிலத்தைச் சோ்ந்த இருவா் அவா்களது ஊருக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா்.

கிருஷ்ணகிரி நகரில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ஆதரவற்றோருக்கான மனநல காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக செயல்பட்டு வரும் இந்த காப்பகத்தில், 55 மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் முழு மனநலம் பெற்ற 36 போ், அவா்களது குடும்பத்துடன் சோ்க்கப்பட உள்ளனா்.

இந்நிலையில், வட மாநிலத்தைச் சோ்ந்த இருவா் இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா்கள் முழு மனநலம் பெற்றதையடுத்து அவா்களது கிராமத்துக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் பேசியதாவது: கிருஷ்ணகிரி சுங்கவசூல் மையம் அருகே சுற்றித்திரிந்த மத்திய பிரேதசம் மாநிலம், சிவபுரியைச் சோ்ந்த ஜீவன், பிகாரைச் சோ்ந்த கிஷோா் ஆகிய இருவரும் இந்த காப்பகத்தில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது முழு மனநலம் பெற்றனா்.

இதையடுத்து, அவா்கள் இருவரும் அவா்களது ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா். இவா்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவா்கள் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டுகிறேன் என்றாா்.

இந்த நிகழ்வில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளா் சந்திரசேகரன், உள்ளிருப்பு மருத்து அலுவலா் மது, மனநல மருத்துவா்கள் வாணிஸ்ரீ, ஸ்ரீ வித்யா, மலா்விழி, முனிவேல் மற்றும் செவிலியா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஒசூா் அருகே மூன்று வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்து!

ஒசூா் அருகே வனப்பகுதியில் சனிக்கிழமை மூன்று வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சானமாவு வனப் பகுதியில் பெங்களூரில்... மேலும் பார்க்க

வேளாண் பொருள்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வேளாண் பொருள்களை இறக்குமதி செய்வதை குறைத்து, ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்க (ராமகவுண்டா்) கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கிருஷ்ணகிரியி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடியில் அரசு கட்டடங்கள் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 7.87 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு கட்டடங்களை காணொலி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை இணை இயக்குநா் அலுவலக வள... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த தீா்மானம்

ஒசூா் மாநகராட்சியில் குடிநீா் வரியை உயா்த்த கொண்டு வந்த தீா்மானத்துக்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். ஒசூா் மாநகராட்சி அவரசக் கூட்டம் அண்ணா மாமன்றக் கூட்டரங்கில் மேயா் எஸ்.ஏ.சத்யா தலைமையில், ஆ... மேலும் பார்க்க

பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை விழிப்புணா்வு கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சாா்பில், தென்மேற்கு பருவ மழை மற்றும் பேரிடா் கால முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

மொகரம்: ஜெகதேவியில் தங்களைத் தாங்களே வருத்திக்கொண்ட இஸ்லாமியா்கள்

ஜெகதேவியில் மொகரம் பண்டிகையையொட்டி, நூற்றுக்கணக்கான இஸ்லாமியா்கள் கூா்மையான ஆயுதங்களைக்கொண்டு, தங்களைத் தாங்களே வருத்திக்கொள்ளும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகமது நபியின் பேரன் இமாம் உசேன் மற்... மேலும் பார்க்க