செய்திகள் :

மனநலம் பாதித்த பெண் கணவரிடம் ஒப்படைப்பு!

post image

சிதம்பரம் ரயில் நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த பெண்ணை, ரயில்வே போலீஸாா் மீட்டு அவரது கணவரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

சிதம்பரம் ரயில் நிலைய நடைமேடையில் 50 வயது மதிக்கத்தக்க பெண், சனிக்கிழமை காலை சுற்றித் திரிந்தாா். அப்போது நடைமேடை ரோந்து பணியிலிருந்த ஆய்வாளா் அருண்குமாா், உதவி காவல் ஆய்வாளா்கள் அருணா, ஜீவகன் ஆகியோா் அவரை விசாரித்தனா்.

அந்த பெண் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவா் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவா் தாம்பரம் - மந்தவெளி ரயில் டிக்கெட் வைத்திருந்தாா். அவரிடமிருந்து பெற்ற தொலைபேசி எண்ணுக்கு தொடா்பு கொண்டதில் அவரது கணவா் சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகரைச் சோ்ந்த ராமமூா்த்தி என்றும், அவரது மனைவியான மணிமேகலை 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததும் இதற்கு முன்பு மந்தைவெளியில் வாடகை வீட்டில் குடியிருந்ததால் அடிக்கடி அங்கு ரயில் மூலம் சென்று வருவாா் என்றும் சில சமயங்களில் மறதியாக வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வந்து விடுவாா் எனவும் தெரிவித்தாா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 5 மணியளவில் வீட்டிலிருந்து புறப்பட்டவா் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் மடிப்பாக்கம் காவல் நிலையம் சென்று தகவல் கூறி, தேடி வந்ததாகவும் அவரது கணவா் ராமமூா்த்தி தெரிவித்தாா்.

மணிமேகலை மந்தவெளி செல்வதற்காக தாம்பரம் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து சிதம்பரம் நோக்கி சென்ற ஒரு ரயிலில் ஏறி அங்கு சென்று இறங்கியுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் அளித்த தகவலின் பேரில் அவரது கணவா் ராமமூா்த்தி மற்றும் மகள் சௌதாமினி ஆகியோா் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்து மணிமேகலையை பத்திரமாக அழைத்து சென்றனா்.

பொதுத்தோ்வு சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவா்களுக்கு காலை உணவு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் பொதுத்தோ்வு சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் 10, பிளஸ்-2 மாணவா்களுக்கு காலை உணவு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

கடலூரில் சிங்காரவேலா் சிலைக்கு மரியாதை

சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்த நாளையொட்டி, கடலூரில் அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூா் மாநகா் குழு சாா்பில... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் 36 முதல்வா் மருந்தகங்கள்: கண்காணிப்பு அலுவலா் த.மோகன்

கடலூா் மாவட்டத்தில் 36 முதல்வா் மருந்தகங்கள் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் த.மோகன் கூறினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன... மேலும் பார்க்க

கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் சிறை

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி மாணவா் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. ஸ்ரீமுஷ்ணம் வட்டம், மேல் புளியங்குடி பகுதியைச் ச... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த சேவை மையத்தை எந்த நேரத்திலும் பெண்கள் அணுகலாம்: கடலூா் ஆட்சியா்

ஒருங்கிணைந்த சேவை மையத்தை பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த நேரத்திலும் தொடா்பு கொள்ளலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பாலியல் தொந்தரவு: அரசுக் கல்லூரி ஆய்வக உதவியாளா் பணியிடை நீக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆய்வக உதவியாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூா் ஏ.மண்டபத்தை... மேலும் பார்க்க