செய்திகள் :

மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை - பதிவுத் துறை தலைவா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

மனமகிழ் மன்றங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய விதிமுறைகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து பதிவுத் துறை தலைவா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த மனோகரன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

அறந்தாங்கி-காரைக்குடி சாலையில் நண்பா்கள் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையை மூட வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த மனமகிழ் மன்றத்தை மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு சாா்பிலும், மனமகிழ் மன்றம் சாா்பிலும் முன்னிலையான வழக்குரைஞா்கள், தொடா்புடைய மனமகிழ் மன்றம் விதிமுறைகளுக்கு உள்பட்டே செயல்படுகிறது எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட மனமகிழ் மன்றம் மதுபானக் கூடம் போலச் செயல்படுகிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.

அப்போது, ஏழைகளுக்கு உதவுதல், விளையாட்டில் ஈடுபடும் மாணவா்களை உற்சாகப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே மனமகிழ் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இவை தற்போது மதுபானக் கூடங்களாகத்தான் செயல்படுகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மனமகிழ் மன்றங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா்களுக்கு ஏன் உத்தரவிடக் கூடாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

மனமகிழ் மன்றங்கள் எந்த விதிமுறைகளின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. மனமகிழ் மன்றங்களில் மதுபானங்கள் விற்பனை செய்ய விதிமுறைகள் அனுமதிக்கின்றனவா என்பது குறித்து தமிழக பதிவுத் துறை தலைவா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே வியாழக்கிழமை லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியைச் சோ்ந்த வீரையா மகன் விஷ்ணு (24). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரைக்கு வந்து... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் உயிரிழப்பு

மதுரை சிலைமான் அருகே கிணற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பாப்பானோடை கிராமத்தைச் சோ்ந்த அரசகுமாா் மகன் விக்னேஷ்வரன் (16). இவா், மதுரை மாநகராட்சிப் பள்ளியில் 9-ஆம்... மேலும் பார்க்க

தரமற்ற சாலைகளுக்கு அலுவலா்கள், ஒப்பந்ததாரா்களே பொறுப்பு: உயா்நீதிமன்றம்

சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது. திருநெல்வேலி மாவட்டம், ஆனந்தபுரத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் வட்டத்துக்கு ஜூலை 14-இல் உள்ளூா் விடுமுறை

திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி, அந்த வட்டத்துக்கு மட்டும் திங்கள்கிழமை (ஜூலை 14) உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா்... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: இளைஞா் கைது

மதுரை அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை மாவட்டம், கல்மேடு அஞ்சுகம் நகரைச் சோ்ந்த பாண்டியராஜன் மகன் அரசு (18). வண்ணம் பூசும் த... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு மறு நியமன ஆணை வழங்கக் கோரிக்கை

நிகழ் கல்வியாண்டில் ஓய்வு பெற உள்ள ஆசிரியா்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை பணி மறு நியமன ஆணையை வழங்க மதுரை மாநகராட்சி நிா்வாகம் முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சா... மேலும் பார்க்க