செய்திகள் :

மனைவி, கள்ளக் காதலன் தலையினை வெட்டிக் கொலை செய்த கணவர்!

post image

கள்ளக்குறிச்சி: மலைக்கோட்டாலம் கிராமத்தில் மனைவி மற்றொறுவருடன் தனிமையில் இருந்ததைப் பார்த்த கணவர் கொடுவாளால் இருவரது தலையை வெட்டி பையில் எடுத்துக் கொண்டு வேலூர் மத்திய சிறையின் முன்பாக நின்று கொண்டிருந்தவரை, வேலூர் காவல் நிலையத்தில் காவலர்கள் வியாழக்கிழமை ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சியை அடுத்த மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் கொளஞ்சி (60). இவரது இரண்டாவது மனைவி லட்சுமி (42). தம்பதிகளுக்கு 3 பெண் பிள்ளைகள் இருப்பதாக தெரிகின்றது. மனைவியின் நடத்தையில் சந்தேகம் உள்ளதாக கணவருக்கு தெரியவந்ததையொட்டி, மனைவியைக் கண்டித்தாராம்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு லட்சுமி, அவரது வீட்டு மொட்டைமாடியில் அதே ஊரைச் சேர்ந்த கந்தன் மகன் தங்கராசு (62) உடன் தனிமையில் இருந்துள்ளார். இதனை அறிந்த அவரது கணவர் கொடுவாளால் இருவரது தலையையும் துண்டாக வெட்டிவிட்டாராம். இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர்.

தகவலறிந்த கிராம மக்கள் வியாழக்கிழமை காலை லட்சுமியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தபோது உடன் இருந்தவர் யார் என்று தெரியவில்லையாம். பின்னர் அவரது சடலத்தின் அருகே செல்லிடைபேசி கிடந்துள்ளதாம். அதனை பார்த்ததும் தங்கராசு எனத் தெரிந்து கொண்டனராம்.

உடனே வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தி.சரவணன், கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் செ.தங்கவேல், கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ம.ராபின்ஸன் மற்றும் போலீஸார் நிகழ்விடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

இருவரின் சடலத்தையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொளஞ்சியை தேடிப்பார்த்துள்ளனர். எங்கேயும் கிடைக்கவில்லையாம்.

உடனே விரல்ரேகை நிபுனர் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டனர். விரல்ரேகை நிபுனர் தடயங்களை சேகரித்தார். மோப்பநாய் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் மலைக்கோட்டாலம் குவாரி அருகே சென்று நின்றுவிட்டதாம்.

கொளஞ்சி இருவரது தலையையும் பையில் எடுத்துக்கொண்டு, இன்று(செப். 11) காலை வேலூர் மத்திய சிறையின் முன்பாக நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு பணியில் இருந்த காவலர்கள் பார்த்து வேலூர் பாகாயம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் காவலர்கள் பாகாயம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.

பின்னர், வேலூர் போலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் பேரில் தியாகதுருகம் காவல் ஆய்வாளர் மலர்விழி, கச்சிராயபாளையம் காவல் உதவி ஆய்வாளர் ரா.ஆனந்தராசு மற்றும் போலீஸார் வேலூருக்கு விரைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:

கோவையில் அக். 9,10-ல் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் ஸ்டாலின்

கோயம்புத்தூரில் வரும் அக். 9,10 ஆகிய தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலின் இன்று (செப். 11) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக... மேலும் பார்க்க

மின்சுற்றுப் பலகை உற்பத்தி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதிதாக நிறுவவுள்ள மல்டிலேயர் எச்டிஐ பிரிண்டட் சர்க்யூட் போர்டுகள் உற்பத்தி திட்டத்த... மேலும் பார்க்க

ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!

ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள... மேலும் பார்க்க

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை!

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஒரிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.தென்னிந்திய பகுத... மேலும் பார்க்க

ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து அன்புமணியை நீக்குவதற்கு ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகி வழக்கறிஞர் கே. பாலு தெரிவித்துள்ளார்.பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் நோட்டீஸுக்கு பத... மேலும் பார்க்க

நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்: ஒசூரில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

ஒசூர் : தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக ஒசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.ஒசூரில் இன்று காலை தொ... மேலும் பார்க்க