நாம் படைத்த சாதனைகளை நாமே முறியடிக்கிறோம்: ஒசூரில் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
ஒசூர் : தொழில்துறையில் தமிழகம் படைத்த சாதனைகளை தமிழகமே முறியடித்து வருவதாக ஒசூரில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.
ஒசூரில் இன்று காலை தொடங்கிய தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜெர்மனி, லண்டன் போன்ற ஐரோப்பிய பயணங்களை முடித்துக் கொண்டு ரூ.15,516 கோடி முதலீடுகளுடன் திரும்பிய மூன்று நாள்களில், இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் உங்களை சந்தித்திருக்கிறேன்.
இன்று நடைபெறும் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.26 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகள் கையெழுத்தாகிறது. இதன் மூலம் நமது சாதனைகளை நாமே உடைக்கிறோம்.
8 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கக் கூடிய ரூ.1060 கோடி மதிப்பிலான நான்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஒசூர் திறமையும் புதுமையும் சந்திக்கும் நகரமாக உள்ளது. தமிழகத்தின் வரைபடத்தில் தனித்த அடையாளம் பெற்ற நகரமாக உள்ளது ஒசூர். வளர்ச்சியைப் பொருத்தவரை, இந்தியாவைக் கடந்து உலக அளவில் தனிக்கவனம் பெறும் நகரமாகவும் ஒசூர் உள்ளது என்று தமிழக முதல்வர் கூறியிருக்கிறார்.
Chief Minister M.K. Stalin proudly stated at the Industrial Investors Conference held in Hosur that Tamil Nadu is surpassing the achievements made by Tamil Nadu in the industry.
இதையும் படிக்க... மதுபோதை + கூகுள் மேப் = கடலுக்குள் இறங்கிய கார்!