செய்திகள் :

மமதா பானர்ஜி சிறைக்குச் செல்வது நிச்சயம்: பாஜக

post image

மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி சிறைக்குச் செல்வது நிச்சயம் என்றும், அவர் முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக தலைவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த 2016-ல் நடந்த ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. தேர்வுகளில் பதில் எழுதாத வெற்று தாள்களைச் சமர்ப்பித்த பலருக்கும் போலியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, பணியமர்த்தப்பட்டனர் என்பதே புகாராகும். மேலும், 24,640 பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் 25,753 பேருக்குப் பணி நியமனம் வழங்கப்பட்டதும் சர்ச்சையானது.

இதையடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் மாநிலத்தில் கிட்டத்தட்ட 26 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஆள்சேர்பை ரத்து செய்த உத்தரவை உறுதி செய்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஹரியாணாவில் ஓ.பி.சௌதாலாவுக்குப் பிறகு ஆசிரியர் ஆள்சேர்ப்பில் சிறைக்குச் செல்லும் இரண்டாவது முதலவர் மமதா பானர்ஜி என்று மத்திய அமைச்சரும் மேற்குவங்க பாஜக தலைவருமான சுகந்தா மஜும்தார் கூறினார். பாஜக மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் சட்டத்தின் முழு பலமும் அவர் மீது பாயும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா வலியுறுத்தினார்.

இதையடுத்து சம்பித் பத்ரா கூறுகையில், மமதா பானர்ஜிக்கு ஆட்சியில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை, அவருக்குப் பொறுப்புணர்வு இருந்தால் ராஜிநாமா செய்ய வேண்டும். அவர் நிச்சயமாகச் சிறைக்குச் செல்வார் என்றார்.

பணியமர்த்தப்பட்ட 26 ஆயிரம் பேரில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பேர் உண்மையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் மாநிலத்தின் ஆளும் டிஎம்சி தலைவர்களால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட மோசடியில் பயணடைந்தனர். பணிநீக்கம் செய்யப்பட்ட தகுதியான ஊழியர்களுக்கு ஆளும் கட்சியின் நிதி அல்லது முதல்வர் நிவாரண நிதி மூலம் அரசு சம்பளம் வழங்க வேண்டும்.

மனிதாபிமான அடிப்படையில் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மமதா பானர்ஜி கூறியதைக் குறிப்பிட்ட அவர், மமதா மீது உச்ச நீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, 25,753 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் வக்ஃப் திருத்தச் சட்டம் அமலாகாது - முதல்வா் மம்தா உறுதி

‘அண்மையில் நடைமுறைக்கு வந்த வக்ஃப் திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது. மாநிலத்தின் சிறுபான்மையினா் மற்றும் அவா்களின் சொத்துகளை நான் நிச்சயம் பாதுகாப்பேன்’ என்று அந்த மாநில முதல்வா் ம... மேலும் பார்க்க

ஊழல் குற்றச்சாட்டு: பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்

‘கேரள முதல்வா் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்’ என பாஜக புதன்கிழமை வலியுறுத்தியது. மேலும், அவா் தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க உயா்நிலைக் குழு அமைக்கவும் பாஜக கோரிக்கை வைத்... மேலும் பார்க்க

ஏா் இந்தியா விமானத்தில் சக பயணி மீது சிறுநீா் கழித்த நபா் - நடவடிக்கை எடுக்க அரசு உறுதி

தில்லி-பாங்காக் (தாய்லாந்து) இடையிலான ஏா் இந்தியா விமானத்தில் சக பயணி மீது மற்றொரு பயணி சிறுநீா் கழித்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடா்பாக விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: நியமனம் ரத்தான ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம் - போலீஸாருடன் மோதல்

மேற்கு வங்கத்தில் உச்சநீதிமன்றத்தால் பணி நியமனம் ரத்து செய்யப்பட்ட ஏராளமான ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்கள், தங்களுக்கு மீண்டும் பணி கோரி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பல இடங்களில் போராட்டக்கா... மேலும் பார்க்க

அரசுத் துறைகளில் மின்சார வாகனப் பயன்பாடு: அறிக்கை சமா்ப்பிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனம் பயன்படுத்துவது குறித்த திட்ட அறிக்கையை சமா்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நகா்ப்புறங்களில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குற... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டம்: ஜம்மு-காஷ்மீா் பேரவையில் அமளி

புதிய வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து ஆளும் தேசிய மாநாடு கட்சி விவாதத்துக்கு கோரிய நிலையில், அதற்கு பாஜக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரைவயில் புதன்கிழமை 3-ஆவது நாளா... மேலும் பார்க்க