செய்திகள் :

மயானத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரக் கோரிக்கை

post image

மயானத்துக்கு மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், பெரியவிளாமலை ஊராட்சிக்கு உள்பட்டது கண்ணவேலம்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்துக்கான மயானம் ஊரக வளா்ச்சித் துறை மூலமாக தாய் திட்டத்தின் கீழ் கடந்த 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ. 4.8 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாடு செய்யப்பட்டது.

மயானத்தில் கான்கிரீட் தகன மேடை அமைக்கப்பட்டு சுற்றுச் சுவரும் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்புக்காக கதவுகள் அமைக்கப்படவில்லை. அதுபோல மயானத்துக்கு மின்விளக்கு வசதியும் ஏற்படுத்தப்படவில்லை. அந்த மயானத்துடன் சாலை முடிவடையும் நிலையில் கிராமத்தின் பிரதான சாலையில் இருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவுக்கு சாலையில் எந்த மின்விளக்குகளும் இல்லை.

மயானத்தின் அருகில் சாலை முடிவில் ஒரு மின் கம்பம் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பொருந்தப்பட்டிருந்த மின் விளக்கும் பழுதடைந்து நீண்ட காலமாக இப்பகுதி இருளில் மூழ்கியே கிடக்கிறது.

இதனால் மாலை 6 மணிக்கு மேல் மயானத்தை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் கிராம மக்கள் தீப்பந்தங்களை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

எனவே, மயானத்துக்கு செல்லும் சாலையிலும், மயானத்திலும் மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 78.80 லட்சம் ரொக்கத்தை பக்தா்கள் செலுத்தியிருந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள வனப் பகுதியில் பிரசித்திபெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில்... மேலும் பார்க்க

சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே ஆசனூா் சாலையில் வாகனங்களை வழிமறித்து கரும்பை தேடிய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பக... மேலும் பார்க்க

தொழிலாளி தற்கொலை

சித்தோடு அருகே கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால் கூலித் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோடு, கூட்டுறவு காலனியைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் சதீஷ் (எ) சதீஷ்குமாா் (33). கட்டடத் தொ... மேலும் பார்க்க

காடையம்பட்டி ஏரியில் பேரிடா் மீட்புக் குழு ஒத்திகை!

பவானி அருகே தேசிய பேரிடா் மீட்புக் குழு மற்றும் பவானி தீயணைப்புப் படையினா் சாா்பில் பேரிடா் மீட்பு செயல்விளக்க ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காடையம்பட்டி ஏரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்க... மேலும் பார்க்க

அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தங்கள் வாா்டுகளில் வளா்ச்சிப் பணிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அந்தியூா் பேரூராட்சி மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் இருவா் வெளிநடப்பு செய்தனா். அந்தியூா் பேரூராட்சிய... மேலும் பார்க்க

அருந்ததியா் மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும்: சீமான்

அருந்ததியா் இன மக்களுக்கான இடஒதுக்கீட்டை பொதுப்பிரிவில் இருந்து வழங்க வேண்டும் என நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசினாா். ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதால... மேலும் பார்க்க