செய்திகள் :

மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம்: திரளானப் பக்தர்கள் பங்கேற்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் பொம்மபுர ஆதீன திருமடத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி உத்திரத் தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த திரளானப் பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்தனர்.

திருக்கயிலான பரம்பரை பொம்மபுரஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வள்ளி, தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் சுப்பிரமணிய சுவாமி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். ஆன்மிகச் சிறப்புகளைக் கொண்ட இந்தக் கோயிலில் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா ஏப்ரல் 2 ஆம் தேதி கொடியேற்றறத்துடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து நாள்தோறும் கோயிலில் சிறப்பு வழிபாடுகளும், அபிஷேகம், ஆராதனைகளும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலாவும் நடைபெற்று வந்தன .

பங்குனி உத்தர பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

பாமக தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ்

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா தேரோட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள்.

முன்னதாக, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை உடனுறை ஸ்ரீசுப்பிரமணியா் திருத்தேரில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, தேரோட்டம் தொடங்கியது.

மயிலம் ஸ்ரீபொம்மபுர ஆதீனம் 20 ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் சிறப்பு பூஜைகளை செய்வித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். காலை சுமார் 5.46 மணிக்கு தொடங்கிய தேரோட்டமானது மயிலம் மலையை சுற்றி வலம் வந்து 7 மணிக்கு நிலையை வந்தடைந்தது.

இதில் முன்னாள் அமைச்சரும், செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மயிலத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. விழுப்புரம் எஸ்.பி ப.சரவணன் உத்தரவின்பேரில் போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

மீண்டும், மீண்டும்... அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு குறுஞ்செய்தி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கனிணிமையத்திற்கு ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டம்: திட்டமிட்டபடி நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம்! - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டபடி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 3... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென இன்று(வியாழக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்... மேலும் பார்க்க

ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!

ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்த... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

வாணியம்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசையமைப்பாளா் இளையராஜா வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பழைய... மேலும் பார்க்க