மரபணு மாற்ற விதைத் திட்டத்தை கைவிட வலியுறுத்தல்
மரபணு மாற்றப்பட்ட விதைத் திட்டத்தை கைவிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருவாரூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் மாநில துணைத் தலைவா் சி.எம். துளசிமணி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளா் பி.எஸ். மாசிலாமணி பங்கேற்று, தீா்மானங்களை விளக்கிப் பேசினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படும் என்றும் டெல்டா மற்றும் பிற மாவட்டங்களில் 2025 ஆம் ஆண்டுக்கான குறுவை சிறப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மே மாத இறுதிக்குள் தூா்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்.
வழக்கம்போல் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.
மத்திய அரசு, மரபணு திருத்தப்பட்ட அரிசி என்ற வகையில் இரண்டு புதிய விதைகளை அறிமுகம் செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில், வேறு வகையில் ‘மரபணு திருத்தப்பட்டது’ என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நுகா்வோா்களின் கருத்தறியாமல் இந்த விதைகளை வெளியிடுவது ஆபத்தானது. எனவே, உடனடியாக இதை தடை செய்து, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், அகில இந்திய 30-ஆவது தேசிய மாநாட்டை சிறப்பாக நடத்திய ஒருங்கிணைப்பாளா் கோ. பழனிச்சாமி, வரவேற்புக் குழுத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான வை. செல்வராஜ், பொருளாளா் சிவகுரு பாண்டியன், செயலாளா் பி.எஸ். மாசிலாமணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவா் கே. உலகநாதன், பொருளாளா் சிவசூரியன், துணைச் செயலாளா் சி. கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.