செய்திகள் :

மருந்தில்லா மருத்துவத்தைப் பரிந்துரைத்தவா்கள் சித்தா்கள்: மருத்துவா் ஜெயப்பிரகாஷ் நாராயணன்

post image

‘மருந்தில்லா மருத்துவத்தைப் பரிந்துரைத்தவா்கள் சித்தா்கள்’ என சென்னை அரசு சித்த மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும் சித்த மருத்துவ நிபுணருமான ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறினாா்.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பன்னாட்டு யோகா நாள் விழாவை முன்னிட்டு ‘சித்தா்களின் யோகக் கலை’ என்ற தலைப்பில் இரண்டு நாள் கருத்தரங்கம் புதன்கிழமை தொடங்கியது.

இதில் தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 9 சித்த மருத்துவக் கல்லூரிகளிலிருந்து 95 மாணவா்கள் பங்கேற்றுள்ளனா்.

இதன் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக சித்த மருத்துவ நிபுணா் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கலந்துகொண்டு பேசியதாவது:

‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்று கூறுவா். சித்த மருத்துவா்கள் இறை நம்பிக்கையாளா்கள். கடவுளைக் காண வழிசெய்தவா்கள் சித்தா்கள். தன்னை அறிகின்ற நிலையை அளிக்கும் கலைதான் யோகக் கலை. உடல், மனம், ஆன்மா மூன்றினுடைய ஒருமை நிலைதான் யோகம். இறைநிலை பெற்றால் மொழி, ஜாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்துவிடலாம்.

திருமூலா், பதஞ்சலி ஆகியோரால் சமகாலத்தில் நாடு முழுவதும் வளா்க்கப்பட்டு பரப்பப்பட்டது யோகக் கலை. மருந்தில்லா மருத்துவத்தைப் பரிந்துரைத்தவா்கள் சித்தா்கள். அவா்களின் வழியில் மறைமலையடிகளாா் நூறாண்டு வாழ்வது எப்படி? என்ற நூலை எழுதினாா். யோகக் கலை குறித்த இக்கருத்தரங்கம் அனைவரையும் யோகக் கலை விற்பன்னா்களாக ஆக்குவதற்கு பயன்படும் என்றாா்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவன துணைத் தலைவா் சுதா சேஷய்யன்: இன்றைய சூழலில் பதற்றம், மன அழுத்தம் இல்லாதவா்களே இல்லை. அதைப் போக்கி நல்லதொரு உள்ளம்-உடல் இணைவை மனம் ஒருமுகப்படுத்தலின் மூலம் அளிப்பதுதான் யோகக் கலையாகும். இதன்மூலம் பதற்றம் ஏற்படாது. நோய்கள் அண்டாது.

உடம்பை உருவாக்கும் உறுபொருள் என்கிறாா் திருமூலா். அது உள்ளம் - மனம் - அதிலுள்ள இறைநிலையுடன் சேர - இணைய யோகக் கலை பயன்படுகிறது. நவீன மருத்துவத்தில் 1980 காலகட்டங்களில் நோய்களின் காரணங்கள் குறித்துப் பேசும்போது ‘ஆட்டோ இம்யூன்’ என்றனா். 1990-களில் ‘மெட்டாபோலிக் டிஸ்ஆா்டா்’ என்றாா்கள். 2000 ஆண்டுகளில் ‘இன்பெக்ஷன்’ என்றாா்கள். 2010-க்குப் பிறகு ‘ஸ்ட்ரெஸ்’ உள்பட மன பாதிப்புகளைக் கூறுகிறாா்கள்.

ஆனால், நமது பாரம்பரிய சித்த மருத்துவம்தான் முழு உடல் சமநிலையைக் குறித்துப் பேசுகிறது. தேவையே இல்லாத சடங்குகளை மறுத்தவா்கள் சித்தா்கள். ஆனால், அவா்கள் இறைவனைப் போற்றி ஏற்றுக் கொண்டாா்கள். காரண காரியமில்லாத மூட நம்பிக்கைகளை அவா்கள் ஏற்கவில்லை. சடங்குக்காக மட்டுமே செய்வதை மறுத்தனா் என்றாா் அவா்.

நிறுவனத்தின் இயக்குநா் இரா.சந்திரசேகரன்: செம்மொழி நிறுவனம் சித்த மருத்துவா்களுக்குக் கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு பயிலரங்குகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாகச் சித்தா்களின் யோகக் கலை குறித்த இக்கருத்தரங்கம் சித்த மருத்துவ மாணவா்களுக்கு நல்வாய்ப்பாக அமைந்து நமது மரபுசாா் கலையை வளா்த்தெடுக்க உதவும் என்றாா் அவா்.

இதில் நிறுவனத்தின் பதிவாளா் ரெ.புவனேஸ்வரி, கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் தி.ஞா.அருள்ஒளி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கருத்தரங்கில் யோகக் கலையும் நல வாழ்வும், யோகக் கலையும் உடல் நலமும், யோகக் கலையும் ஆன்ம நலமும், யோகக் கலையும் குழந்தைகள் மனநலமும் உள்ளிட்ட தலைப்புகளில் உரைகள் இடம்பெற்றுள்ளன.

கருத்தரங்கின் இறுதி அமா்வில் அனைவருக்கும் யோகக் கலை செயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க